சற்று நேரத்தில் ஆரம்பமாகிறது ‘நீட்’ 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ளது  எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர்.தேர்வு நாடு முழுவதும் உள்ள 497 நகரங்களில் நடைபெறுகிறது. தேர்வு மதியம் 2 முதல் 5:20 மணி  வரை நடைபெற உள்ளது.

நீட் மாணவர்க்கொல்லி என்பதற்கு இது தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும் – அன்புமணி ராமதாஸ்

நீட் மாணவர்க்கொல்லி என்பதற்கு இது தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அரியலூரைச் சேர்ந்த நிஷாந்தி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் அரியலூரைச் சேர்ந்த நிஷாந்தி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து … Read more

மாணவர்கள் கவனத்திற்கு…இன்றே கடைசி நாள்,இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?..!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 6 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,பின்னர் மே 15 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு விடுத்தது. அதன்படி,https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,முன்னதாக நீட் தேர்வு 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற நிலையில் இனி 3 மணி … Read more

ஜெயலலிதா இருந்த போது நீட்டை தமிழகத்திற்குள் நுழைய விடவில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழைய விடவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது, திட்ட விளக்க பணிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னை ஜிகேஎம் காலனியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தையும் … Read more

ஆளுநர் தவறும் பட்சத்தில் மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் – மநீம

கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யம் ட்வீட்.  தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும, ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே அரசியல் ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக நீட்தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர்  திருப்பி அனுப்பியாதிலிருந்து இந்த கருத்து வேறுபாடு தொடர்ந்து வருகிறது. நீட் விலக்கு மசோதா  இதனையடுத்து தமிழக சட்ட மன்றத்தில் தமிழக அரசு மீண்டும் நீட் மசோதாவை தாக்கல் … Read more

#BREAKING: நீட் மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை திருப்பி அனுப்பினார் தமிழ்நாடு ஆளுநர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாகவும், திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்.1-ஆம் தேதி தமிழக அரசுக்கு விளக்கி உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களை நீட் … Read more

திமுகவின் சமூக நீதி போராட்டங்கள் தொடரும் – கனிமொழி எம்.பி

திமுகவின் சமூக நீதி போராட்டங்கள் தொடரும் என கனிமொழி எம்.பி அவர்கள் ட்வீட். மருத்துவ மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27%, EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘PG மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 27% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட … Read more

நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முதல்வர்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தியா முழுவதும் செப்.12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி செப்.15ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, தமிழக … Read more

அறிவிச்சாச்சு: NEET-JEE தேர்வு தேதி இதோ!!

கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு  எப்போது நடைபெறும் என்ற தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு  வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க  வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து நீட் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு … Read more

காவு வாங்கிய நீட்..! மாணவி தீக்குளித்து தற்கொலை..!

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு முறை அண்மையில் கொண்டு வரப்பட்டது.இந்தியா முழுவதும் உலா மாணவர்கள் இந்த தேர்வினை கடும் கட்டுபாடுகளுடன் எழுதினர்.இன்று இந்த தேர்விற்கான முடிவுகள் வெளியாகியது. இந்நிலையில் நீட் தேர்வு மருத்துவ படிப்பிற்கு பதிலாக மரணத்தையே மாணவர்களுக்கு கொடுத்து வருகிறது. திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்த நிலையில் அடுத்து மேலும் ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வில் … Read more