நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முதல்வர்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்தியா முழுவதும் செப்.12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி செப்.15ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.