நாகர்கோவில் மேயருக்கு கொலை மிரட்டல்… காங்கிரஸ் கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு!

Nagercoil Mayor

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 44வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் என்பவர், கொலை மிரட்டல் விடுப்பதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில், கார் மூலம் இடிக்க முயன்றதாகவும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மேயர் மகேஷ் தரப்பு கொடுக்கப்பட்ட புகாரில் தகவல் கூறப்பட்டுள்ளது. அதாவது, நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் மேயர் மகேஷ் … Read more

கர்நாடக குக்கர் குண்டு வெடிப்பு.! ஊட்டியை தொடர்ந்து நாகர்கோவிலில் அதிரடி சோதனை…

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுனரும்,பயணித்தவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆட்டோவில் கிடைத்த வயர், பேட்டரி போன்ற பொருட்களை இருந்ததை தொடர்ந்து இது தீவிரவாத சதி சம்பவமாக இருக்கலாம் என்கிற கோணத்தில் கர்நாடக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆட்டோவில் பயணித்தவர் … Read more

நரிக்குறவர்களை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர்,நடத்துனர் சஸ்பெண்ட்!

நாகர்கோவில்:நரிக்குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு,தாய்,தந்தை,குழந்தை ஆகியோரை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர்,நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்படுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் எனும் மீன் விற்கும் தாயாரை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் பெருமளவில் பேசப்பட்டது. தாயார் தனது மனக்குமுறலை பேருந்து நிலையத்தில் கதறலாக கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில் முதல்வர் உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பேருந்து … Read more

அழகிகளை வைத்து சொகுசு பங்களாவில் விபச்சாரம் நடத்திய பெண் புரோக்கர்!கண்ணிவைத்து பிடித்த காவலர்கள்!

சொகுசு பங்களாவில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய பெண் புரோக்கரை காவல்துறையினர் கண்ணிவைத்து பிடித்துள்ளனர். உல்லாசமாக இருந்த இரண்டு நபர்களோடு பெண் புரோக்கரையும் கைது காவல்துறையினர் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை சந்திப்பு பகுதியில் ஒரு சொகுசு பங்களா உள்ளது.அதில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த பங்களாவில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்கள் வந்து சென்றுள்ளனர்.இவ்வாறு அடிக்கடி ஆண்கள் … Read more

நாகர்கோவில் நாகராஜா கோவில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தை தேரோட்டம்..!!

கன்னியகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று நாகர்கோவில் நாகராஜா கோவில். இக்கோவிலனது நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.மேலும் இந்த கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.மேலும் இக்கோவிலில் தை திருவிழாவானது ஆண்டு தோறும் 10 நாட்கள் படு சிறப்பாக கொண்டாடப்பட்டும் அதன்படி இந்த ஆண்டுக்கான தை திருவிழாவானத்து கடந்த 13 தேதி அன்று கொடியேற்றத்துடன் வேகுஸ் சிறப்பாக தொடங்கியது.கொடியேற்ற விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு,சுவாமி வாகனத்தில் எழுந்தருளல் மற்றும் மாலையில் … Read more

நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் பேரணியில் பங்கேற்ற 140 பேர் மீது வழக்கு..!

மத்திய பாரதிய ஜனதா ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி நேற்று நாகர்கோவிலில் பாரதிய ஜனதா சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் அவரும் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் ஓட்டிச்சென்றார். இந்த பேரணி நாகர்கோவில் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் திரளான பாரதிய ஜனதா … Read more

சித்திரை திருவிழா..!! நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் தொடங்கியது..!!

சித்திரை திருவிழா நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் தொடங்கியது இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 9.15 மணிக்கு திரளான பக்தர்களுக்கு மத்தியில் திருக்கொடியேற்றம் நடந்தது. அதன்பிறகு அன்னதானம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உணவு அருந்தினர். இரவில் பக்தி இன்னிசையை தொடர்ந்து புஷ்பக வாகனத்தில் சாமி எழுந்தருளினார். திருவிழாவின் … Read more