எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்ததற்கு ஒப்பானது – மல்லிகார்ஜுனே கார்கே

Congress Leader Mallikarjun Kharge invited meeting INDIA Alliance Parties

நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் நேற்று அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர். ஒரேநாளில் கனிமொழி உட்பட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்… மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! அந்த … Read more

கரூரில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு – மாநகராட்சி அதிகாரி சஸ்பெண்ட்..!

விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என கூறி தேசிய மனித உரிமை … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம். கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த … Read more

#BREAKING: இரு சிறுமிகள் உயிரிழப்பு – இருவர் பணியிடை நீக்கம்!

கழிவறை தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் இரு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு. பேரூராட்சி கழிவறை (செப்டிக் டேங்) தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் வீரமணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பேரூராட்சியின் கழிவறை தொட்டியில் தவறி விழுந்து சிறுமிகள் சிறுவர் உயிரிழந்தனர். பண்ணைப்புரத்தில் 1-ம் வகுப்பு படித்து வந்த சுபஸ்ரீ (6), … Read more

உ.பி-யில் ஆசிரியைக்கு மசாஜ் செய்துவிட்ட மாணவர்..! ஆசிரியர் சஸ்பெண்ட்..!

உ.பி-யில் ஆசிரியைக்கு மாணவர் மசாஜ் செய்துவிட்ட  வீடியோ வைரலானதையடுத்து, ஆசிரியர் சஸ்பெண்ட். உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஊர்மிளா சிங் என்பவர் நாற்காலியில் அமர்ந்த வண்ணம், மாணவர் ஒருவர் அவருக்கு மசாஜ் செய்து விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த  வீடியோவில், ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அவரது கையை மாணவர் ஒருவர் மசாஜ் செய்து விடுகிறார். மற்ற மாணவர்கள், கீழ் அமர்ந்துள்ளனர். இந்த … Read more

மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட்..!

மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காரணத்தால், திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு … Read more

சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? – பீட்டர் அல்போன்ஸ்

மூடிமறைக்கப்படும் அக்கிரமங்களை வெளிக்கொணர, போராடுவதற்காகத்தானே எதிர்க்கட்சிகள்! சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காரணத்தால், திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், … Read more

பாஜக பிரமுகர் வெட்டி கொலை – பாதுகாவலர் சஸ்பெண்ட்

பாஜக பிரமுகர் பாலசந்தர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதுகாவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று இரவு அவரது பாதுகாப்பு காவலர் பிஎஸ்ஓ பாலகிருஷ்ணன் சித்தாதரிபேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்று அங்கு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது காவலர் பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த 6 … Read more

மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட் ..!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது விற்பனை குறித்து கண்பார்வையற்ற இளைஞர் சங்கர்  தொடர்ந்து புகார் அளித்ததால் காவலர்கள் அவரை லத்தியால் தாக்கியுள்ளனர். மாற்றுத்திறனாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்குதல் நடத்தியதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. கண்பார்வையற்ற சங்கரை அழைத்துசென்று லத்தியால் தாக்கிய புகாரில் 3 போலீசார் மீது  எஸ்.பி நிஷா பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி,  செந்தில், அசோக், பிரபு ஆகிய 3 போலீசாரை … Read more

நரிக்குறவர்களை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர்,நடத்துனர் சஸ்பெண்ட்!

நாகர்கோவில்:நரிக்குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு,தாய்,தந்தை,குழந்தை ஆகியோரை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர்,நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்படுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் எனும் மீன் விற்கும் தாயாரை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் பெருமளவில் பேசப்பட்டது. தாயார் தனது மனக்குமுறலை பேருந்து நிலையத்தில் கதறலாக கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில் முதல்வர் உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பேருந்து … Read more