ரம்மி, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ்.!

தமிழகத்தில் நிகழ்ந்த 17 தற்கொலைகள் தொடர்பாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகள் குறித்து பல்வேறு வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 17 வழக்குகளை விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக … Read more

ஒவ்வொரு புதன் கிழமையும் குறை தீர்ப்பு முகாம் – டிஜிபி அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் ஆகியோர் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

#Breaking : புயல் எச்சரிக்கை.! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!

கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 50 நீச்சல் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ள்ளார்.  வங்க கடலில் நேற்று உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதே போல் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை, மிக கனமழை பெய்யும் என … Read more

திருடனை மடக்கி பிடித்த பெண் காவலருக்கு டிஜிபி பாராட்டு..!

செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு தாம்பரத்தில் பயணி ஒருவரிடம் இருந்து விலை உயர்ந்த ‘ஐ- போனை’ பறித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்த திருடனை பெண் காவலர் காளீஸ்வரி சாதுரியமாக மடக்கி பிடித்தார். இவரது துணிச்சலான இந்த செயலுக்கு அதிகாரிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சாதுரியமாக செயல்பட்டு செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் … Read more

#Breaking:கொரோனா விதிமுறைகளை மீறிய வழக்குகள் வாபஸ் – டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு!

தமிழகத்தில் முன்னதாக கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.மேலும்,வெளிமாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.எனினும்,இ-பாஸ் பெற்றதில் முறைகேடு,காவல்துறையினரை தங்கள் கடமையை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக டிஜிபி அறிவித்துள்ளார்.  கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியது தொடர்பான வழக்குகளை வாபஸ் … Read more

“ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!

சென்னை:தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள … Read more

அரை மணி நேரத்திற்குள் காவல்துறை சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும்-டிஜிபி சைலேந்திரபாபு..!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் காவல்துறை சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் காவல்துறை சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். மேலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் மூலமாக குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக மாவட்ட … Read more

#BREAKING : தமிழக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை..! – டிஜிபி

தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை. தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுவதாகவும், அனுமதி இல்லாததால் அனைவரும் புத்தாண்டை அவரது குடும்பத்தினருடன் வீடுகளில் கொண்டாடுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழகத்தில் கொரோனா நோய்த் நொற்றுப் பரவலை ட்டுப்படுத்தவும். தற்போது பரலி வரும் உருமாறிய ஒமமக்ரான் வைரளி பரவனை தடுக்கவும், … Read more

ஆடு திருடிய கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய டிஜிபி..!

ஆடு திருடிய கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய டிஜிபி சைலேந்திர பாபு திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்  திருடனை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில், மர்மநபர்கள் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதில் அவர் காவல் ஆய்வாளரை … Read more

மழை பாதிப்பு குறித்து வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை – டிஜிபி எச்சரிக்கை

மழைப் பாதிப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தியான செய்திகள் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இந்நிலையில், மழைப் பாதிப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தியான செய்திகள் பரவி வந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று, வதந்தியாக வீடியோக்களை … Read more