ரம்மி, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ்.!

தமிழகத்தில் நிகழ்ந்த 17 தற்கொலைகள் தொடர்பாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகள் குறித்து பல்வேறு வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 17 வழக்குகளை விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக … Read more

#Breaking : புயல் எச்சரிக்கை.! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!

கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 50 நீச்சல் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ள்ளார்.  வங்க கடலில் நேற்று உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதே போல் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை, மிக கனமழை பெய்யும் என … Read more

கோவைக்கு விரைந்தார் டிஜிபி சைலேந்திர பாபு.! காவல் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை.!

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முக்கிய காவல் அதிகாரிகளுடன் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. முபின் உடன் தொடர்பில் … Read more

#Breaking : கோவை கார் வெடிப்பு.! தலைமை செயலகத்தில் டிஜிபி முக்கிய ஆலோசனை.!

கோவை கார் வெடிப்பு விபத்து தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு ஆகியோரதலைமை செயலகத்தில்  மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம் ஆகியோர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். இந்த கார் … Read more

புகார் தர வருவோரை கேலி செய்ய கூடாது.. கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.! டிஜிபி சுற்றறிக்கை.!

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருவோரை கனிவுடன் நடத்த வேண்டும். அவர்களை கேலி செய்ய கூடாது என சில அறிவுறுத்தல்களை டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை மூலம் காவலர்களுக்கு அனுப்பியுள்ளார்.   காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருவோரை சரிவர நடத்துவதில்லை அவர்கள் தாங்களை தான் பெரிய அதிகாரிகள் என சிலர் நினைத்து செயல்படுகின்றனர் என்ற புகார்கள் அவ்வப்போது எழுவது உண்டு. தற்போது அது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஓர் அறிக்கை ஒன்றை அனைத்து காவலர்களுக்கும் அனுப்பி உள்ளார். … Read more

இணையத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.! முழுவீச்சில் களமிறங்கிய சமூக ஊடக குழு.!

இணையம் வாயிலாக பரப்பப்படும் பொய்யான வதந்திகள், குற்ற சம்பவங்களை தடுக்க சமூக ஊடக குழு உருவாக்கப்பட்டுள்ளது. என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.  சமூக வலைதளத்தில் வதந்திகள் பரப்புவது மற்றும் தனிநபர் தாக்குதல் தற்போது அதிகரித்து உள்ளன. அவற்றை தடுக்கவே தற்போது காவல்துறை சார்பில் மாநகர, மாவட்ட அளவில் சமூக ஊடக குழு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மூலம் சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுவதை இதன் மூலம் தடுக்கப்படும்.மேலும், … Read more

செஸ் ஒலிம்பியாட் நிறைவு.. காவலர்களுக்கு பிரியாணி விருந்து.! டிஜிபி அசத்தல்.!

செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதில் பெரிதும் உதவிய காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களுக்கு பிரியாணி விருந்து அளித்தார்.  கடந்தமாதம் ஜூலை 28ஆம் தேதி சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி வெகு கோலாகலமாக தொடங்கி , கடந்த 10ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த விழாவில் பல்வேறு நாட்டு செஸ் வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்கள், போட்டி நடைபெற்ற இடங்கள், மற்ற பொது இடங்கள், அரசியல் பிரபலங்கள், விஐபிகளின் பந்தோபஸ்து … Read more

கழுத்தறுக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த டிஜிபி..!

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள், கழுத்தறுக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.  நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் நேற்று கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம், முத்துசாமி மகன் ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆறுமுகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக அபராதம் விதித்தது குறித்து ஆறுமுகம் வாக்குவாதத்தில் … Read more

“ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!

சென்னை:தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள … Read more

Breaking:”எனது பயணத்தின்போது மக்கள் பாதிக்கப்படக் கூடாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை:தனது வாகன பயணத்தின்போது பொதுமக்கள் பாதிக்கப் படக்கூடாது என்று டிஜிபியிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். ஆளுநர் பாதுகாப்பு வாகனம் செல்லும் போது பொது மக்கள் பாதிக்கபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், டிஜிபி சைலேந்திரபாபு அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சென்னை ராஜ் பவனில் நேற்று (6-11-2021) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திர … Read more