8 வயது குழந்தையின் உயிரை வாங்கிய ஆன்லைன் சூதாட்டம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Anbumani Ramadoss

சென்னை மாவட்டம் மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யா என்பவர் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி விளையாடி பணத்தை இழுந்துள்ளார். கடன் வாங்கி விளையாடி வந்ததால் பணமும் இழந்து கடனாளியாகவும் மாறினார். கடனை கட்டமுடியாது என்ற காரணத்தால் தன்னுடைய 8 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாமும் தற்கொலை செய்து கொள்ள முயற்சிசெய்துள்ளார் . பிறகு அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது காவல்துறை விரைந்து செயல்பட்டதால் … Read more

ரம்மி, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ்.!

தமிழகத்தில் நிகழ்ந்த 17 தற்கொலைகள் தொடர்பாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகள் குறித்து பல்வேறு வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 17 வழக்குகளை விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக … Read more

தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை… கோவையில் மென்பொறியாளர் உயிரிழப்பு.!

ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக கடனில் சிக்கி கோவையை சேர்ந்த சங்கர் என்கிற மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம் எனவும், அதற்கு அடிமையாக வேண்டாம் என அரசு அறிவுறுத்தினாலும் ஆன்லைன் சூதாட்டத்தால் நடக்கும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் உயிரை மாய்த்துகொள்வது இன்னும் வேதனை அளிக்கிறது. கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சங்கர், 29வயதான இவர் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஆன்லைன் சூதாட்டம் … Read more

அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் – அண்ணாமலை

பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது என அண்ணாமலை பேட்டி.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது … Read more

ஆன்லைன் சூதாட்டத்தின் உச்சக்கட்டம்.! தன்னையே பணயமாக வைத்து விளையாடி பெண்.!

உத்திர பிரதேசத்தில் ஒரு பெண் ஆன்லைன் லூடோ விளையாட்டில் பணத்தை அதிகமாக இழந்து தன்னையே பணயமாக வைத்து விளையாடி தொற்றுள்ளர்.  உத்திர பிரதேசம் நாகர் கோட்வாலியில் உள்ள தேவ்கலி பகுதியில் ரேணு என்கிற பெண் ஆன்லைன் விளையாட்டான லுடோ விளையாடி அதற்கு அடிமையாகி பணத்தை வைத்து விளையாடி வந்துள்ளார். அவரது கணவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். அதிகமாக பணத்தை இழந்த ரேணு ஒரு கட்டத்தில் எல்லை மீறி தன்னையே பணயமாக வித்து விளையாடியுள்ளார் … Read more

இந்த பெண் உயிரிழப்புக்கு காரணமான ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட வடமாநில பெண் உயிரிழப்புக்கு காரணமான ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.  தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இதுகுறித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறுகையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் யாரேனும் தற்கொலை செய்து கொண்டால் ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட வடமாநில … Read more

இளைஞர்களின் உயிர்கள் இனி பறிபோகாமல் தடுக்க முடியும்..! – விஜயகாந்த்

இந்த சட்டத்தால் பல இளைஞர்களின் உயிர்கள் இனி பறிபோகாமல் தடுக்க முடியும் என்பதால் தமிழக அரசை பாராட்டுகிறேன் என விஜயகாந்த் ட்வீட்.  தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.  இதனையடுத்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டமானது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  இந்த நிலையில், இதற்கு தேமுதிக விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், ‘ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்து தமிழக சட்டசபையில் … Read more

ஆன்லைன் சூதாட்டம் : காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட நீதி என்பது… மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் – ஜெயக்குமார்

ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க கோரிய அவசர சட்டம் – காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட நீதி என்பது… மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என ஜெயக்குமார் ட்வீட்.   ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டத்திற்கு கடந்த மாதம் 26ஆம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அவசர சட்டத்திற்கு தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுகுறித்து  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க கோரிய அவசர சட்டம் … Read more

லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும் – அன்புமணி ராமதாஸ் ட்வீட்

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை சீரழித்து விடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு, வல்லுனர் குழு அறிக்கை அளித்து 20 நாட்கள் ஆகும் நிலையில் இன்று வரை ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை தமிழக அரசு இதுவரை பிறப்பிக்காதது ஏன்? அதற்கு … Read more

ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே இது காட்டுகிறது! – அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு. ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே இது காட்டுகிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு … Read more