8 வயது குழந்தையின் உயிரை வாங்கிய ஆன்லைன் சூதாட்டம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Anbumani Ramadoss

சென்னை மாவட்டம் மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யா என்பவர் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி விளையாடி பணத்தை இழுந்துள்ளார். கடன் வாங்கி விளையாடி வந்ததால் பணமும் இழந்து கடனாளியாகவும் மாறினார். கடனை கட்டமுடியாது என்ற காரணத்தால் தன்னுடைய 8 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாமும் தற்கொலை செய்து கொள்ள முயற்சிசெய்துள்ளார் . பிறகு அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது காவல்துறை விரைந்து செயல்பட்டதால் … Read more

சாதிக்க வேண்டியவர்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது ஆன்லைன் ரம்மி! – ராமதாஸ்

ஆளுனரின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த பாமக தயாராக இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் பதிவு. ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக கடனில் சிக்கி கோவையை சேர்ந்த சங்கர் என்கிற மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இவர் ஆன்லைன் சூதாட்டம் அடிக்கடி விளையாடி அதில் அடிமையாகி இருந்ததாகவும், நண்பர்களிடம் கடன் வாங்கி அதிக பணத்தை தோற்றதால், தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், சாதிக்க வேண்டியவர்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது ஆன்லைன் ரம்மி என்று பாமக தலைவர் அன்புமணி … Read more

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும் – பாமக தலைவர்

ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் 34-ஆவது தற்கொலை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அவசர சட்டம் முன் வரவை சட்டப்பேரவையில் … Read more

ஆன்லைன் சூதாட்டம்; 33-ஆவது தற்கொலை இதுவாகும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது என பாமக தலைவர் எச்சரிக்கை. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலை நீடித்து வருகிறது. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி … Read more

அவசர சட்டம் காலாவதியானது! சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்!

நிரந்தர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தினால் ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம். ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியானது. அதே நேரத்தில், இதற்கான சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. செப்டம்பர் 26-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு அக்டோபர் 1-ஆம் தேதி … Read more