ஆன்லைன் சூதாட்டத்தின் உச்சக்கட்டம்.! தன்னையே பணயமாக வைத்து விளையாடி பெண்.!

உத்திர பிரதேசத்தில் ஒரு பெண் ஆன்லைன் லூடோ விளையாட்டில் பணத்தை அதிகமாக இழந்து தன்னையே பணயமாக வைத்து விளையாடி தொற்றுள்ளர். 

உத்திர பிரதேசம் நாகர் கோட்வாலியில் உள்ள தேவ்கலி பகுதியில் ரேணு என்கிற பெண் ஆன்லைன் விளையாட்டான லுடோ விளையாடி அதற்கு அடிமையாகி பணத்தை வைத்து விளையாடி வந்துள்ளார். அவரது கணவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அதிகமாக பணத்தை இழந்த ரேணு ஒரு கட்டத்தில் எல்லை மீறி தன்னையே பணயமாக வித்து விளையாடியுள்ளார் . அதில் தோற்றதன் காரணமாக அவர் தற்போது காணாமல் போயுள்ளார். இதனை அவரே தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஷயம் அறிந்து பதறிப்போன ரேணுவின் கணவர், தன் மனைவியை மீட்டுத்தர கோரி பிரதாப்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரேணு மற்றும் அவரது கணவருக்கு 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment