அமைச்சர் ஜெய்ஷங்கர் பேசியது, தேசியவாதம் அல்ல கோழைத்தனம் - ராகுல் காந்தி

Feb 26, 2023 - 08:22
 0  0

அமைச்சர்கள் அதானியை பாதுகாத்து வருகின்றனர் என சத்தீஸ்கர் காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி பேச்சு.

சத்தீஸ்கர் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி எம்பி, காஷ்மீரில் சமீபத்தில் முடிவடைந்த 'பாரத் ஜோடோ' யாத்திரையின் போது தான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் கன்யகுமாரி முதல் காஷ்மீர் வரை என் தேசத்திற்காக நடந்தேன். பாரத் ஜோடோ யாத்திரையின் போது நான் விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டு அவர்களின் வலியை உணர்ந்தேன் என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், சீனா மிகப்பெரிய பொருளாதாரம் கொண்டது. நாம் எப்படி அவர்களுடன் சண்டையிட முடியும்? என அமைச்சர் ஜெய்ஷங்கர் பேசியது, தேசியவாதம் அல்ல கோழைத்தனம் என விமர்சித்தார். மேலும், தொழிலதிபர் அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். ஆனால், அதற்கு பதில் இல்லாமல், அமைச்சர்கள் அந்த தொழிலதிபரை பாதுகாத்து வருகின்றனர் எனவும் குற்றசாட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow