திடீரென அதிகரித்த தங்கம் விலை.! சவரனுக்கு ரூ.80 உயர்வு…

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதாவது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தினமும் 80 ரூபாய் சரிந்து வந்தநிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று (12. 01. 2024) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,560-க்கும் கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,820-க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிலோ ரூ.77,500-க்கும் ஒரு கிராம் ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவின் மிக நீளமான ‘அடல் சேது’ பாலத்தை திறந்து வைக்கும் பிரதமர்.!

சென்னையில் நேற்று (11. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து  ரூ.46,480-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், கிராம் ரூ.77.50க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.