ஜூலை 21-ம் தேதி மாநாடு.. இந்தாண்டில் புதிதாக 2 பாட பிரிவுகள் தொடக்கம் - அமைச்சர் பொன்முடி

Jul 13, 2023 - 06:57
 0  1
ஜூலை 21-ம் தேதி மாநாடு.. இந்தாண்டில் புதிதாக 2 பாட பிரிவுகள் தொடக்கம் - அமைச்சர் பொன்முடி

இவ்வாண்டில் புதிதாக 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன என அமைச்சர் பொன்முடி தகவல்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, ஜூலை 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்தார். பொறியியல் கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெறும். ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 7 வரை முதல் சுற்று கலந்தாய்வும், 2ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9 முதல் 22 வரை நடைபெறும் என்றார்.

பின்னர் செப்டம்பர் 15ம் தேதிக்குள் கலந்தாய்வை முடித்து விடுவோம் என தெரிவித்தார். இதன்பின் பேசிய அமைச்சர் பொன்முடி, இவ்வாண்டில் புதிதாக 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அட்வான்ஸ் கம்யூனிகேஷன் டெக்னலாஜி, டிசைன் டெக்னலாஜி என்று 2 பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஜூலை 21-ம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow