கடமைக்காக வந்த இடத்தில் குழந்தைகளை பார்த்து கொண்ட பெண் காவலர்கள் ..!

அசாமில் இரண்டு பெண் போலீசார் கையில் குழந்தையை வைத்து இருக்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இரு காவல்துறையினரும் குழந்தைகளை வைத்து இருப்பது பலரின் மனதைக் கவர்ந்து உள்ளது. ஏனென்றால் இந்த இரண்டு குழந்தைகளின் தாய் அம்மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) தேர்வு எழுத வந்து உள்ளனர்.அவரின் குழந்தைகளை தான் இரண்டு பெண் போலீசாரும் கவனமாக தேர்வு முடியும் வரை பார்த்து கொண்டனர். இந்த புகைப்படத்தை அசாம் காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் … Read more

மலிஷா ஹீனா நிர்வாண புகைப்படங்களை ஆதரிப்பதாக கூறிய பாகிஸ்தான் பாடகி ..!

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி ரபி பிர்சாடா. இவர் பிரதமர் மோடியை விஷ பாம்புகளை வைத்து மோடியை கொல்லப்போவதாக கூறி கொடிய பாம்புகளுடன் இருக்கும்  புகைப்படங்கள் மூலம் மிரட்டல் விடுத்தார். மேலும் இவரது அந்தரங்க படங்கள் ஆன்லைனில் கசிந்ததை அடுத்து பொழுதுபோக்கு துறையில் இருந்து விலகுவதாக பாடகி ரபி பிர்சாடா அறிவித்தார்.  பின்னர் “பொழுதுபோக்கு துறையில் இருந்து வெளியேறுகிறேன். என் பாவங்களை இறைவன் மன்னிப்பான். எனக்கு ஆதரவாக மக்களின் இதயங்களை பெற முயற்சிப்பேன்”என அவர் கூறினார். இந்நிலையில் … Read more

உள்துறை அமைச்சகத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு அருகே காரில் குண்டு வெடித்ததில் நேற்று 7 பேர் சம்பவ இடத்திலே இறந்தனர். மேலும்  7 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இரண்டு பேராசிரியர்களுக்கு பதிலாக இரண்டு தலிபான் தளபதிகள் மற்றும் ஹக்கானி போராளிக்குழுவின் தலைவர் விடுவிக்கப்பட்ட ஒரு நாள் சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத்தில் நாளை 3 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு..!

நீண்ட நாள்களாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.இதனால் அயோத்தி வழக்கு ஒரு முடிவிற்கு வந்தது. இந்நிலையில் நாளை மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை உச்சநீதிமன்றம்  வழங்க உள்ளது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கும் தீர்ப்பிற்கு எதிராக மறு ஆய்வு மனுகள் தாக்கப்பட்டனர்.இந்த வழக்கின் தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் அறிவிக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல்காந்தி “காவலாளியே திருடன் “என கூறியது தொடர்பாக தொடரப்பட்ட … Read more

திருமணத்தை நிறுத்த காதலனை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட மணப்பெண் ..!

சென்னை அயனாவரத்தை சார்ந்த பெண் ஒருவருக்கு திருமண ஏற்பட்டு செய்யப்பட்டு இருந்தது.இதை தொடர்ந்து மாப்பிள்ளையின் போனிற்கு ஒரு புதிய நம்பரில் இருந்து புகைப்படங்கள் வந்து உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த மாப்பிள்ளை தனது பெற்றோரிடம் சென்று தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணிற்கு வேறு ஒருவருடம் தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கு வந்த புகைப்படத்தை மாப்பிள்ளை தனது பெற்றோரிடம் காட்டி உள்ளார். அதில் மணப்பெண் வேறு ஒருவருடன் இருப்பதை பார்த்த மாப்பிள்ளையின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தி அடுத்த … Read more

ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு..!

ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு விமானத்துறைக்கு 36 ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பளித்தது.இந்நிலையில் ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என கூறிய தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. ரஃபேல் விமான வழக்கில் சீராய்வு  செய்யுயப்பட்ட  மனு மீது நாளை தீர்ப்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்றைய (13.11.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல் ,  பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி  விற்பனையாகிறது. அதன் படி நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.69.54 காசுகளாகவும் , பெட்ரோல் ஒரு லிட்டருக்கு  ரூ.76.18 காசுகளாகவும்  விற்பனையாகிறது.

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செல்லும் உச்ச நீதிமன்றம்..! இடைத்தேர்தல் அறிவிப்பு..!

கர்நாடகவில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களை முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தது சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியை சார்ந்த 14 ,மதசார்பற்ற ஜனதாதன கட்சியை சார்ந்த 3 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவாக செலயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்ததனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரியே … Read more

தூங்கும்போது சார்ஜ் செய்த இளைஞர்..! போன் வெடித்து உயிரிழப்பு..!

ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் சார்ஜ் செய்யும் போது மொபைல் போன் வெடித்ததில் 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதே மாநிலத்தில் உள்ள  நாயகர் மாவட்டம் ரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த குனா பிரதான்.இவர் பரதீப்பில் பகுதியில் ஜகந்நாத் கோயில் கட்டுமான பணி தொழிலாளியாக வேலை செய்து வந்து உள்ளார். இந்த கோவிலை ஜெகந்நாத் டிரக் உரிமையாளர்கள் சங்கம் கட்டி வருகிறது. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அறையில் போன் சார்ஜ் செய்து கொண்ட குனா பிரதான் தூங்கிக் … Read more

பிகானேரில் ஆட்டோ , லாரி மோதல்..! 7 பேர் பலி , 5 பேர் காயம் ..!

ராஜஸ்தானின்உள்ள  பிகானேர் மாவட்டத்தின் தேஷ்னோக் நகரில் நேற்று முன்தினம் காலை  லாரி மீது ஆட்டோ  மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் இன்னும் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை.  இதேபோன்ற சம்பவம் கடந்த மாத தொடக்கத்தில் நடந்தது. பிகானேர் மாவட்டத்தில் ஒரு கோயிலில் இருந்து திரும்பிய மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர் மற்றவர்கள் … Read more