பிகானேரில் ஆட்டோ , லாரி மோதல்..! 7 பேர் பலி , 5 பேர் காயம் ..!

ராஜஸ்தானின்உள்ள  பிகானேர் மாவட்டத்தின் தேஷ்னோக் நகரில் நேற்று முன்தினம் காலை  லாரி மீது ஆட்டோ  மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் இன்னும் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை.  இதேபோன்ற சம்பவம் கடந்த மாத தொடக்கத்தில் நடந்தது.
பிகானேர் மாவட்டத்தில் ஒரு கோயிலில் இருந்து திரும்பிய மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர் மற்றவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்து ராஜியாசர் பகுதியில் உள்ள ஸ்ரீ கங்கநகர்-பிகானேர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan