பொதுமக்கள் கவனத்திற்கு..! பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை..!

தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அணைகள், ஏரிகள் என நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அந்த வகையில், தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாறு அணைக்கட்டில் இருந்து 1,724 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாலாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் … Read more

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு – எடப்பாடி பழனிசாமி

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறவிருந்த போராட்டம் 14 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவிப்பு.  திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலர் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இந்த போராட்டம் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர், தஞ்சை, விருதுநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, … Read more

24 புதுக்கோட்டை மீனவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்..!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்துள்ளது.  இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர்,  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து, இன்று இலங்கை நீதிமன்றம் அவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது. இந்த நிலையில் … Read more

#Breaking : திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிற்பகல் 3 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ளுமாறும்அறிவுறுத்தியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை பார்த்து சிலர் பொறாமை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைபடுகின்றனர் என நிர்மலா சீதாராமன் பேச்சு  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைபடுகின்றனர். பொருளாதாரம் வளர்ந்து வருவது எதிர்க்கட்சியினருக்கு பிரச்சினை ஏற்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை கண்டு பெருமைப்படாமல் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

#Holiday : சென்னை, வேலூர் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை..!

மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை தமிழகத்தில் சமீப நாட்களாக மாண்டஸ் புயலை தொடர்ந்து சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் மாலை 3 மணிக்கு வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு..!

தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் … Read more

பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது – சிபிஐஎம்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் கூட்டத்தின் தலைவர் பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது என சிபிஐஎம் விமர்சனம்.  பிரதமர் மோடி நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் குறுக்குவழி அரசியல் தோன்றுவது சரியல்ல. அரசியல் கட்சிகள் அரசியல் நலனுக்காகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்கும் நோக்கிலும் குறுக்கு வழிகளை கடைபிடித்து உழைத்து சம்பாதித்த மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர் என தெரிவித்திருந்தார். … Read more

ரஜினிகாந்த் பிறந்தநாள் – ஓபிஎஸ் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்.  இன்று ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது இனிய நண்பரும், மனிதநேயப் பண்பாளரும், அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.  எனது … Read more

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பை மேலும் அதிகரிக்க முடிவு..!

செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்காங்கே உள்ள அணைகள் ஏரிகள் நிரம்பி வழிந்து வருகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காலை 9 மணி முதல் வினாடிக்கு … Read more