24 புதுக்கோட்டை மீனவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்..!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்துள்ளது. 

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர்,  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து, இன்று இலங்கை நீதிமன்றம் அவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது.

இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட 24 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment