தமிழக மீனவர்கள் 24 பேரை விடுதலை!

tn fisherman

Fisherman : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேர் விடுதலை. கடந்த மார்ச் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதன்பின், 19 மீனவர்களையும் விடுதலை செய்து இலங்கை … Read more

BANvsSL : வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி ..! அடுத்த டார்கட் உலகக்கோப்பை தான் ..!

Srilanka [fileimage]

BANvsSL : வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்த இலங்கை அணி, அந்த சுற்றி பயணத்தொடரில் கடைசியாக நடந்த டெஸ்ட் போட்டியை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. இந்த ஆண்டில் கடந்த மார்ச்-3 தேதி முதல் வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்த இலங்கை அணி 3டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டிகளில் இலங்கை அணி அபாரமாக … Read more

கச்சத்தீவு விவகாரம்! 21 முறை முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் – ஜெய்சங்கர் விளக்கம்!

Jaishankar

Kachchatheevu: கச்சத்தீவு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன் என்று மத்திய  அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். கச்சத்தீவு ஒப்பந்தம் விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 1974ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தப்படி கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. ஆனால், இரண்டு ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தத்தால் அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதை 1974 … Read more

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது – ராமதாஸ்.!

Tamil Nadu fishermen boat

தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்துள்ளது இலங்கை கடற்படை , நெடுந்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இரண்டு படகுகளுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகம் அழைத்து சென்றுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் … Read more

மீண்டும் தொடங்கும் பேச்சுவார்த்தை.? புத்துயிர் பெறுமா தனுஷ்கோடி – தலைமன்னார் கடல்வழி பாதை…

Dhanushkodi to Thalai mannar

1914ஆம் ஆண்டு முதல் தமிழக கடல் பகுதியான தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரையில் கடல்வழி மார்க்கமாக வணிக போக்குவரத்து தொடங்கப்பட்டு, 1964 வரையில் நீடித்தது. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல்  காரணமாக தனுஷ்கோடி சிதைந்தது. இதனால் கடல்வழி போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு முறை மீண்டும் தனுஷ்கோடி – தலைமன்னார் வரையில் கடல்வழி போக்குவரத்து துவங்கவும், அல்லது 23 கிமீ தூரத்தை இணைக்க பாலம் அமைக்கவும் பேச்சுவார்த்தையை இந்திய அரசு தொடங்கியது. ஆனால் … Read more

போராடி தோற்ற ஜிம்பாப்வே.. இலங்கை அணி திரில் வெற்றி..!

SLvZIM

இலங்கை உடனான ஜிம்பாப்வே சுற்று பயணத்தில் 3 ஒருநாள் போட்டியும் , 3 T20 போட்டியும் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் ஜனவரி 6 அன்று நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் (Toss ) ஐ வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது அதில் இலங்கை அணியின்  பேட்ஸ்மேன் ஆன அசலங்கா நிதனாமாக விளையாடி 105(95) ரன்களை விளாசினார். அவரது ஆட்டத்தால் இலங்கை அணி 50 ஓவர்களில் 273 ரன்களை சேர்த்து. 274 ரன்களை … Read more

முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி… ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் மக்கள்!

SriLanka Jallikattu

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களில் ஜனவரி மாதம் நடைபெறும். அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இதில்,  746 காளைகள் பங்கேற்றன. இந்த நிலையில், முதல் முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் … Read more

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..! 21 தமிழக மீனவர்கள் கைது..!

Fisherman

சமீப காலமாகவே இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், அவரகளது உடைமைகள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்தல் போன்ற அத்துமீரகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்க்கு, தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு தழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுமுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைப்பு! இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக மீனவர்கள் … Read more

துவாரகா வீடியோவில் நம்பகத்தன்மை இல்லை.. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை வெளியீடு!

Dwaraka

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ‘மாவீரர் தினம்’ ஆண்டுதோறும் நவ.27ம் தேதி அந்நாட்டு தமிழர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில், நவ.27ம் தேதி 34-வது மாவீரர் தினத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மறைந்த பிரபாகரனின் மகள் துவாரகா பெயரில் பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். மேலும், … Read more

அதள பாதாளத்தில் இலங்கை பொருளாதரம்.. கரணம் இவங்க தான்… உச்சநீதிமன்றம் பரபரப்பு.!

Basil Rajapaksa - Mahinda Rajapaksa - Gotabaya Rajapaksa 

2020, 2021 கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டன. சில பெரும் நாடுகளின் பொருளாதாரங்கள் கூட சற்று அதிர்வை கண்டது. இந்த பொருளாதார ரீதியிலான சிக்கலில் சிக்கி அடுத்தடுத்து மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறியது. பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் தேவைகள் அதிகரித்து , அதன் இறக்குமதி குறைந்து விலைவாசி உச்சம் தொட்டது. இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த சமயம் மக்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் … Read more