தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அணைகள், ஏரிகள் என நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அந்த வகையில், தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலாறு அணைக்கட்டில் இருந்து 1,724 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாலாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேறுமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ புகைப்படம் எடுக்கவோ கூடாது என காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.