2 இலங்கை அகதிகள் தப்பியோட்டம்..! போலீசார் விசாரணை..!

மண்டபம் முகாமில் இருந்து 2 இலங்கை அகதிகள் தப்பியோட்டம்.  ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் முகாமில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு இருந்த இரண்டு ஈழத் தமிழர்கள் கள்ளதோணி மூலம் இலங்கைக்கு தப்பி  ஓடியுள்ளார். ஜெயநேசன் தாஸ் ஆகிய இருவர் தனுஷ்கோடிக்கு தப்பி சென்றது குறித்து கியூ பிரிவு மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – ஈபிஎஸ் ட்வீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.  இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், முதலவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும்  வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்  அவர்கள் நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது … Read more

புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசம் உண்டு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் ஆட்டிப்படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என முதல்வர்  விமர்சனம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதுவையில், எஸ்.பி. சிவக்குமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நிச்சயமாக அமையும்.  தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது. கலைஞர் கொள்கை உரம் பெற்ற ஊர் புதுச்சேரி. புதுச்சேரி மீது … Read more

அது மேயர் பிரியாவின் துணிச்சல் – அமைச்சர் சேகர் பாபு

முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. அது  பிரியாவின் துணிச்சலாக பார்க்க வேண்டும் அனா அமைச்சர் சேகர் பாபு விளக்கம்  மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் சேகர் பாபு, மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் … Read more

அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.’ … Read more

மெரினாவில் ரவுடி கும்பலின் அட்டகாசம்..! பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணம் பறிப்பு..!

சென்னை மெரினாவில் நள்ளிரவில் பெண்ணிடம் 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் நகை, பணம் உள்ளிட்டவற்றை  பறித்துள்ளனர். சென்னை மெரினாவில் நள்ளிரவில் பெண்ணிடம் 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் நகை, பணம்  உள்ளிட்டவற்றை பறித்ததோடு, பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு குற்றவாளி கடலுக்குள் தப்பியோடியுள்ளார். இதனையடுத்து போலீசார், கடலுக்குள் ஓடிய குற்றவாளியை துரத்திப் பிடித்துள்ளனர். மது போதையில் அட்டகாசம் செய்த 4 பேர் கொண்ட கும்பலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று இமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்கிறார் சுக்வீந்தர் சிங்..!

இன்று காலை 11 மணிக்கு இமாச்சல் முதல்வராக சுக்வீந்தர் சிங்  பதவி ஏற்க உள்ளார். கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பாஜகவும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தீவிர  போட்டியில் ஈடுபட்ட நிலையில், அதன்படி காங்கிரஸ் அதிக தொகுதிகளை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு சுக்வீந்தர் சிங்  முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, முகேஷ் … Read more

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய கனிமொழி எம்.பி..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்குக் கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் நிதிக்கான காசோலையை வழங்கிய கனிமொழி எம்.பி  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்குக் கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் நிதி வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கனிமொழி எம்.பி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களின் குடும்பத்தினரிடம் காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் திருமிகு. கீதா … Read more

மாண்டஸ் புயலால் ரூ.3.45 கோடிக்கு சேதம் – மெட்ரோ நிர்வாகம்

மாண்டஸ் புயல் தாக்காதால், ரூ.3.45 கோடி பொருட்கள் சேதமானதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மாண்டஸ் புயலால் தமிழகத்தில் பெருமளவு பாதிப்புகள் இல்லாவிட்டாலும், சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் தாக்காதால், ரூ.3.45 கோடி பொருட்கள் சேதமானதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. அதன்படி கோயம்பேடு, ஈக்காட்டுத்தாக்கல், சின்னமலை, கிண்டி ரயில் நிலையங்களில் மேற்கூரைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் – அண்ணாமலை

பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது என அண்ணாமலை பேட்டி.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது … Read more