தளபதி விஜய் மற்றும் மக்கள் இயக்க அலுவகத்தில் தேசிய கொடி.! பிரதமரின் கோரிக்கை ஏற்பு.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து, தளபதி விஜய் வீடு மற்றும் விஜய் மக்கள் இயக்கம் அலுவலகதிலும்,  தேசிய கொடி ஏற்றப்பட்டது.  வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய முழுவதும் 75வது சுதந்திர தினவிழா கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாடு  முழுவதும், இன்று முதல் 15ஆம் தேதி வரையில் தேசிய கொடியை  வீடுகளில் பறக்கவிட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் உட்பட பலரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர். … Read more

குடிவாரி கணக்கெடுப்பை எடுங்கள், இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள் – சீமான்

குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என சீமான் கேள்வி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்புகளை வழங்குவது தான் சமூக நீதி. குடிவாரி கணக்கெடுப்பை ஏன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் எடுக்கவில்லை. குடிவாரி கணக்கெடுப்பை எடுங்கள், இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள். குடிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் ஒரே நாடு, ஒரே தேர்தல், உள்ளிட்டவைகளை மத்திய அரசால் நிறைவேற்ற … Read more

நிதியமைச்சர் எங்கு சென்றாலும் எதிர்ப்போம் – பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர்!

அஞ்சலி செலுத்த பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேட்டார் என பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பேட்டி. மதுரை விமான நிலையத்தில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீர்ரகள் மரியாதை செலுத்தினர். இதன்பின் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் சார்பில் மரியாதை செலுத்திய பின், பாஜக சார்பில் மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது … Read more

இவர்களின் உண்மையான முகத்தை தமிழக மக்கள் உணர வேண்டும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

மாண்புமிகு அமைச்சர் அண்ணன் பிடிஆர்  அவர்களின் வாகனத்தின் மீது, ரவுடிகளை வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.  ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழக வீரர் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜர் அவர்கள் வருகை புரிந்தார். அப்போது … Read more

வைரலாகும் டெல்லி பிச்சைக்காரரின் புகைப்படங்கள்

மாடலாக இருக்கும் டெல்லி பிச்சைக்காரனின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. டெல்லி பிச்சைக்காரரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, அவர் பிச்சைக்காரனா அல்லது மாடலா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பிச்சைக்காரனின் புகைப்படத்தை கவால்ஜித் சிங் பேடி ட்விட்டரில் “டெல்லி பிச்சைக்காரர்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டார். டெல்லியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் ஊன்றுகோலின் உதவியோடு நடந்து செல்லும் பிச்சைக்காரன் கருப்பு நிற டீ ஷர்ட் அணிந்து, கிளாஸியான சன்கிளாஸ் அணிந்து சென்றது வைரலாகி வருகிறது. Delhi … Read more

சென்னையில் துணிகரம்.! துப்பாக்கி முனையில் கோடிகணக்கான மதிப்புள்ள தங்க நகை கொள்ளை.?

சென்னையில் தனியார் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடைபெற்றுள்ளது. இதில் கோடிகணக்கில் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  சென்னையில் தற்போது துப்பாக்கி முனையில் மிரட்டி, பிரபல வங்கியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பல கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இயங்கி வரும் பெடரல் வங்கியின் அருகம்பாக்கம் தங்க நகை கடன் பிரிவு கிளையில் இன்று துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ளது. முகமூடி அணிந்த கொள்ளை … Read more

#BREAKING: சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி!

யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.  சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பலை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆக.16 முதல் 22-ஆம் தேதி வரை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. ஹம்பன் தோட்டா துறைமுகத்துக்கு சீன உளவுக்கப்பல் 11-ஆம் தேதி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக சீன உளவுக்கப்பல் வருகையில் தாமதம் ஏற்பட்டது. இந்தக் கப்பலில் … Read more

சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று – முதல்வர் மு.க.ஸ்டாலி ட்வீட்..!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த சில மாதத்திற்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.   மீண்டும் அவருக்கு கொரோனா ,தொற்று தொற்று செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரியங்கா காந்திக்கும் மீண்டும்  கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காங்கிரஸ் தலைவர் … Read more

கொற்றலை ஆற்றின் குறுக்கே 2 அணைகள்.! ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்.!

கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகள் கட்ட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  சென்னை மாநகரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும், கொற்றலை ஆற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் இரண்டு அணைகள் கட்ட ஆந்திர அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்கான வேலைகளில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஈடுபட தொடங்கினார். கொற்றலை ஆறு ஓடும் பெரும் பரப்பளவில் சிறிய பகுதி மட்டுமே ஆந்திராவில் இருக்கிறது. … Read more

கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்து நம் அன்றாட உணவு பொருட்கள்

Liver cancer

நாம் உண்ணும் உணவுகளில் சில கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. சமையலறையில் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களில் சில கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை 4.5 மடங்கு அதிகரிக்கும் என்று ஆய்வு கூறுகிறது. உயர் PFOS அமில அளவுகளை வெளிப்படுத்துவது வைரஸ் அல்லாத HCC என்ற புற்று நோய் அபாயத்துடன் தொடர்புடையது என்று பகுப்பாய்வு காட்டுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த இரசாயனங்கள்(PFAS), பலவிதமான நுகர்வோர் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதை பயன்படுத்தி உருவாக்கப்படும், நான்-ஸ்டிக் குக்வேர், குழாய் நீர்,  … Read more