சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து, தளபதி விஜய் வீடு மற்றும் விஜய் மக்கள் இயக்கம் அலுவலகதிலும், தேசிய கொடி ஏற்றப்பட்டது.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய முழுவதும் 75வது சுதந்திர தினவிழா கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும், இன்று முதல் 15ஆம் தேதி வரையில் தேசிய கொடியை வீடுகளில் பறக்கவிட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர். அதே போல, நடிகர் விஜய் வீட்டிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும், அவரது ரசிகர் மன்ற அலுவலகமான விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திலும், தேசிய கொடி ஏற்றப்பட்டது.