#JustNow: தமிழ்நாட்டில் 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை..

அறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளையொட்டி 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை. முன்னாள் முதலமைச்சர் மறைந்த அண்ணாவின் 113-வது பிறந்தநாள் மற்றும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக சிறையில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புழல் மத்திய சிறை 13, வேலூர் மத்திய சிறை 2, கடலூர் மத்திய சிறை 5, சேலம் மத்திய சிறை 1, கோவை மத்திய சிறை 12, திருச்சி மத்திய சிறை 12, மதுரை … Read more

தளபதி விஜய் மற்றும் மக்கள் இயக்க அலுவகத்தில் தேசிய கொடி.! பிரதமரின் கோரிக்கை ஏற்பு.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து, தளபதி விஜய் வீடு மற்றும் விஜய் மக்கள் இயக்கம் அலுவலகதிலும்,  தேசிய கொடி ஏற்றப்பட்டது.  வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய முழுவதும் 75வது சுதந்திர தினவிழா கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாடு  முழுவதும், இன்று முதல் 15ஆம் தேதி வரையில் தேசிய கொடியை  வீடுகளில் பறக்கவிட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் உட்பட பலரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர். … Read more

#BREAKING: தேசிய கொடி ஏற்றுதல் – தலைமை செயலாளர் உத்தரவு!

எவ்வித பாகுபாடும் இன்றி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவு. சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் … Read more

குறையும் வருமானம்.. மெட்ரோவை விளம்பரப்படுத்த கிராமிய ஐடியா.! இது சுதந்திரதின ஸ்பெஷல்…

நாளை முதல் சுந்தந்திர தினம் வரையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் 75வது சுந்தந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நாடுமுழுவதும் தீவிரமாக அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய காலை நிகழ்ச்சிகளை நடந்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நாளை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும்,  … Read more

#BREAKING: இவைகளை பார்வையிட இலவச அனுமதி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

நினைவு சின்னங்கள், முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி என மத்திய அரசு அறிவிப்பு. நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி,  நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 5-15ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி என்றும் கூறியுள்ளது. அருங்காட்சியங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என … Read more

#BREAKING: சுதந்திர தினத்தன்று விடுமுறை இல்லை – உபி அரசு அதிரடி அறிவிப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை இல்லை என அம்மாநில அரசு அறிவிப்பு. இந்த முறை உத்தரபிரதேச மாநிலத்தில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தன்று விடுமுறை இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, ஆகஸ்ட் 15-ஆம் தேதியில் (75வது சுதந்திர தினம்) பள்ளிகள், … Read more

#Flash:மாணவர்களின் வீடுகளில் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடி – அரசு உத்தரவு!

வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது.இதனை முன்னிட்டு பள்ளி,கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற கர்நாடகா உயர்கல்வித்துறை அமைச்சர் சி.என்.அஷ்வத் நாராயண் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக,அவர் கூறுகையில்:”இந்திய சுதந்திரத்தின் ‘அமிர்த மஹோத்சவ்’ விழாவைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் தங்களது வீட்டில் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.மேலும்,மாநிலத்தில் உள்ள … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு!

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக அயராது உழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர். நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்ஏக்கள் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்து அளித்தார். இதில், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக அயராது உழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அதிகாரிகள் மற்றும் … Read more

டெல்லியின் ஆட்சி ஒரு முன்மாதியாக உருவெடுத்துள்ளது – அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியின் ஆட்சி ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திர தின விழாவில் தெரிவித்துள்ளார். டெல்லி தலைமை செயலகத்தில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கோடியை ஏற்றிப்பின் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது மக்களுக்கு சேவை செய்யும் போது உயிர் இழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கிற்கு … Read more

75-ஆவது சுதந்திர தின விழா – தமிழக ஆளுநர் தேநீர் விருந்து!!

சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.