இனி மெட்ரோ தான் சென்னையின் அடையாளம்… ரெடியானது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ பிளான்.!

Chennai Metro 2nd Phase

Chennai Metro : சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழு வீச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதற்காக 63,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை 2026க்குள் முடித்து 2027ஆம் ஆண்டு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முனைப்பில் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. Read More – அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்.! தமிழக அரசு கடும் எதிர்ப்பு.!  119 மெட்ரோ நிலையங்கள் … Read more

பிப்ரவரில் 86.15 லட்சம் பேர் பயணம்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

Chennai Metro

Chennai Metro: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 86.15 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக பிப்ரவரி 9-ம் தேதி 3,26,786 பயணிகள் பயணம் செய்ததாகவும் ,  கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1,51,624 பேர் அதிகம் பயணித்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. மெட்ரோ ரயில் பார்க்கிங் மூடல்..!

கனமழை காரணமாக சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில்  மழைநீர் தேங்கியுள்ளதால் டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணி வரை பார்க்கிங் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கியுள்ள காரணத்தினால் வாகனம் நிறுத்துமிடம் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. தங்களது இருசக்கர மற்றும் நான்கு … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி.! 3.45 கோடி மெட்ரோ சொத்துக்கள் சேதம்.!

மாண்டஸ் புயலால் 3.45 கோடி ரூபாய் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வங்கக்கடலில் உருவாகி இருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. கரையை கடக்கையில் கடற்கரையோரம் அதீத கற்று வீசியதன் காரணமாக பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தன. இதில் ஒவ்வொரு துறையும் அதன் சேத மதிப்புகளை கணக்கிட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் தனது சேத மதிப்பை அறிவித்துள்ளது. அதன்படி, இதுவரை மாண்டஸ் புயலால் 3.45 கோடி ரூபாய் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   … Read more

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்.! 1,620 கோடியில் அதிநவீன சிக்னல்.!

சென்னையில்  ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வண்ணம் தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கபட உள்ளது.  சென்னை மெட்ரோ நிர்வாகம் தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தி அதற்கான ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அதன்படி,  ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வண்ணம் தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கபட உள்ளது. இதற்கான அதிநவீன சிக்னல் அமைக்க மட்டும் 1,620 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன் மூலம் 1 நிமிடம் 30 வினாடிகள் இடைவெளியில் மெட்ரோ ரயிலை இயக்க … Read more

சென்னை மெட்ரோ பணியில் திடீர் விபத்து.! சேதமடைந்த அரசு மாநகர பேருந்து.!

வடபழனியில் இன்று அதிகாலை சென்னை மெட்ரோ பணிகள் நடைபெற்று இருந்த போது அந்த வழியாக வந்த சென்னை மாநகர பேருந்தின் மீது கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் சென்னை, வடபழனி பணிமனையில் இருந்து 159ஏ என்ற சென்னை மாநகர் பேருந்து புறப்பட்டு சென்றது. பணிமனையில் இருந்து புறப்பட்டதால் பயணிகள் யாரும் பேருந்தில் இல்லை. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. வடபழனி அருகேயும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. … Read more

காந்தி சிலைக்கு நோ.! உழைப்பாளர் சிலைக்கு ஓகே.? குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கான அனுமதி.?

சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் காந்தி சிலை முன்பு குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்த வருட குடியரசு தினவிழாவுக்கும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை தற்போதே தொடங்கி விறுவிறுப்பாக செய்லபடுத்தி வருகிறது. ஆனால் அதில் மிக பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலகத்திற்கு அருகே காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற்று … Read more

சென்னை மெட்ரோவில் பயணித்த மத்திய அமைச்சர்.! தமிழக அரசின் கோரிக்கை பற்றி புதிய தகவல்.!

சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார்.  மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சென்னை வந்துள்ளார். இங்கு வடபழனியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மெட்ரோ ரயிலில் பயணித்து சக பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், மெட்ரோ பணிகளுக்காக தமிழக அரசு கூடுதல் நிதி கேட்டுள்ளது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டு பேசினார். அதற்கடுத்ததாக சென்னை … Read more

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை.! சுரங்கப்பாதை பணிகளை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!  

சென்னையில் மாதவரம்  முதல் சிறுசேரி இடையேயான மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகளை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .  சென்னையில் மெட்ரோ ரயில் முதற்கட்டமாக கடந்த 2015ஆம் ஆண்டு கோயம்பேட்டில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் செல்லக்கூடியதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக சென்னையில் மெட்ரோ பணிக்க தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் மாதவரம்  முதல் சிறுசேரி இடையேயான 45.8 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் 2ம் … Read more

குறையும் வருமானம்.. மெட்ரோவை விளம்பரப்படுத்த கிராமிய ஐடியா.! இது சுதந்திரதின ஸ்பெஷல்…

நாளை முதல் சுந்தந்திர தினம் வரையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் 75வது சுந்தந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நாடுமுழுவதும் தீவிரமாக அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய காலை நிகழ்ச்சிகளை நடந்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நாளை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும்,  … Read more