முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு!

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக அயராது உழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர். நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்ஏக்கள் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்து அளித்தார். இதில், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக அயராது உழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அதிகாரிகள் மற்றும் … Read more

தமிழக சட்டப்பேரவை -இன்று  ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று  ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ஆம் தேதி  கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி  இன்று ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும் , … Read more

நவம்பர் மாதத்திற்குள் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும்- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.ஆளுநர் பேசுகையில்இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. 2021 நவம்பர் மாதத்திற்குள் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும்.சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கான செலவில் மத்திய அரசு 50 சதவீதத்தை ஏற்க வலியுறுத்துவோம் என்று பேசியுள்ளார்.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும் – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.ஆளுநர் பேசுகையில்,தமிழகம் தொடர்ந்து 3 முறை நல்லாளுமைக்கான விருதை பெற்றுள்ளது.முதலமைச்சர் பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தை காட்டுகிறது.தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. முல்லை பெரியாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கேரள அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படுகிறது.நாட்டிலேயே … Read more

ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் – திமுக வெளிநடப்பு.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைமுடிந்த பின் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் … Read more

உச்சநீதிமன்ற கெடு முடிந்தும் ஆளுனர் முடிவெடுக்காதது அநீதி- ராமதாஸ்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் மேலும் ஒரு முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதது மிகவும் வேதனையளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அது குறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப் படவில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் … Read more

பேரறிவாளன் விடுதலை ! தமிழக ஆளுநர் 2 அல்லது 3 நாட்களில் முடிவு எடுப்பார் – மத்திய அரசு பதில்

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 2 அல்லது 3 நாட்களில் முடிவு எடுப்பார் என்று மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது.  ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு … Read more

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் வைத்த கோரிக்கைகள் என்ன ? மு.க.ஸ்டாலின் விளக்கம்

பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனே விடுவிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம் என ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க வலியுறுத்தி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ராஜ் பவனில் சந்தித்தார்.கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோரும் சந்தித்தனர். அப்பொழுது ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் … Read more

#BreakingNews : பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை – ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு அந்த அரசாணையை தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தற்பொழுது வரை ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் வருகின்றார்.இதனிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை … Read more

7 பேர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும் – கவிஞர் வைரமுத்து

7 பேர் விடுதலை குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட். ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான 7 பெரும் 30 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.  தமிழ்நாடு அமைச்சரவை, 2018-ல் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், ஆளுநர் இரண்டு ஆண்டு காலமாக முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இந்நிலையில், பல அரசியல் பிரபலங்கள் மற்றும் … Read more