#Breaking:ஓபிஎஸ் மனைவிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்…!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவிக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில்,சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் இன்று காலை மாரடைப்பால் அவர் காலமானார். இதனையடுத்து,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மருத்துவமனைக்கு சென்று, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி உடலுக்கு மரியாதை செலுத்தி,ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும்,அதிமுககட்சி நிர்வாகிகளும் நேரில் சென்று … Read more

ஓபிஎஸ் மனைவி மறைவு…! கனிமொழி எம்.பி இரங்கல் தெரிவித்து ட்வீட்…!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு கனிமொழி எம்.பி. இரங்கல் தெரிவித்து ட்வீட். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார். இதுகுறித்து கனிமொழி எம்.பி.அவர்கள் இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அதிமுக … Read more

கோடியில் ஒருவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  விஜய் ஆண்டனி தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திலிருந்து வெளியான டீசர், … Read more

செப்டம்பர் 6 வரை பள்ளிகளை திறக்க தடை விதிப்பு – உத்தர பிரதேச அரசு!

வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி வரை உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுது குறைந்துள்ளது. எனவே, பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக … Read more

ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஈபிஎஸ்…!

ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஈபிஎஸ். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மருத்துவமனைக்கு சென்று, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி உடலுக்கு மரியாதை … Read more

“பூமித்தாய் என்று சொல்லாமல் ,தந்தை என்று சொல்லியிருந்தால்”…….. – எம்.பி கனிமொழி ..!

பூமி தாய் என்று சொல்லாமல் ,தந்தை என்று சொல்லியிருந்தால் இயற்கையை அழிக்காமல் இருந்திருப்போம் என்று எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழுவானது ( IPCC ) “காலநிலை மாற்றம் 2021” என்கிற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில்,இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்.பி திருமாவளவன்,எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா,எம்.எல்.ஏ  வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். … Read more

இன்றைய 01.09.2021 முட்டை விலை.!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4.20 ஆக விலை நிர்ணயம். கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் சரிவை கண்ட வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து முட்டை விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் … Read more

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் இன்று பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், இன்று முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களை வகுப்புக்கு  அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோன்று தமிழகத்தில் முதலாம் ஆண்டை தவிர மற்ற கல்லுாரி மாணவர்கள் கல்லுாரியில் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த … Read more

இன்றைய 01.09.2021 பெட்ரோல் & டீசல் விலை.!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 99.08-க்கும் , டீசல் லிட்டருக்கு ரூ 93.38-க்கும் விற்பனை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்தது. பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல், … Read more

தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது – பவன் கல்யாண்!

தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.  தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமாகிய பவன் கல்யாண் அவர்கள், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி நிர்வாகம் குறித்து பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்பிற்குரிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக … Read more