ஆரஞ்சு அலர்ட்! தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

orange alert

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், … Read more

ஆரஞ்சு அலர்ட்! இந்த 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை வாய்ப்பு!

rain

நாளை (ஜனவரி 8)  செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளையும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதைப்போல, நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் … Read more

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! இந்தந்த பகுதிகளுக்கு மட்டும் தான்!

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, ராணிப்பேட்டையில் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு, காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு … Read more

தந்தை பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியை மக்கள் பாராட்டுகின்றனர் என விழுப்புரத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு. விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் ஒழிந்தியாம்பட்டுவில் ரூ.42.69 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். ரூ.42.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10,722 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார். இதையடுத்து ரூ.24 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் முதலமைச்சர் தொடக்கி வைத்தார். இதன்பின் பேசிய முதல்வர், திமுக ஆட்சியில் நிம்மதியாக உள்ளதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த 10 … Read more

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!

ரஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோலில் வந்த பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று, வயிற்று வலி காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு, அவரது  தாயார் அற்புதம்மாள் கடந்த … Read more

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் கைது..!

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து தாய் துளசியை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூரில் வசித்து வரும் தம்பதி துளசி-வடிவழகன். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துளசிக்கு ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் சித்தூருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், துளசியின் செல்பேசியை பார்த்துள்ளார். அதில் அவருடைய ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இருந்துள்ளது. இதனை … Read more

தனது குழந்தையை கொடூரமாகத் தாக்கும் தாய் – வீடியோ வெளியானதால் பரபரப்பு!

தனது குழந்தையை தாய் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன் என்பவரின் மனைவி துளசி, தனது குழந்தையை தாக்கியதும், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது துளசி தனது இரண்டு வயது இளைய மகனை அடித்து துன்புறுத்தியதாக தெரிய வந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி துளசியை ஆந்திராவில் உள்ள தாய் வீட்டில் … Read more

முழு கொள்ளளவை எட்டியது கோமுகி அணை..வினாடிக்கு 1500 கனஅடி நீர் வெளியேற்றம்.!

விழுப்புரம் மாவட்டத்தின் கச்சிராயப்பாளையம் அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கோமுகி அணை உள்ளது.  ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் கச்சிராயப்பாளையம், கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதியின் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியள்ள நிலையில், தற்போது வினாடிக்கு 1500 கனஅடி நீர்வரத்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது.  

காதலனுக்கு திருமணம்… வீட்டின் முன்பு காதலி தர்ணா போராட்டம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் காதலனுக்கு திருமணம் ஏற்பாடு செய்ததால் வீட்டின் முன்பு காதலி தர்ணா போராட்டம். விழுப்புரம் மாவட்டத்தில் அரகண்டநல்லூர் வசந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவருடைய மகள் அன்பரசி மேலும் அதே பகுதியில் வசித்து வருபவர் விஸ்வநாதன் இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர் , இவர்கள் இவருக்கும் காதல் அதிகமானதால் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இதை தொடர்ந்து விஸ்வநாதனுக்கு கடந்த மாதம் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் … Read more

நீரில் மூழ்கி 3 மாணவிகள் பலி…சோகத்தில் மூழ்கிய ஒரு கிராமம்…!!

விழுப்புரம் அருகே ஒரே பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் துணி துவைக்கும் போது கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கக்கன் கிராமத்தை சேர்ந்த மணிமொழி , பவதாரணி கௌசல்யா ஆகியோர் அங்கே உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்துள்ளனர்.இன்று விடுமுறை நாள் என்பதால் 3 மாணவிகளும் கிணற்றில் துணி துவைக்க அவர்கள் சென்றனர். தூணிதுவைக்க சென்ற 3 பேரில் பவதாரணி கால் தவறி கிணற்றில் விழுந்து உள்ளார். அவரை காப்பாற்ற மணிமொழி ,  கவுசல்யாவும் முயற்சித்துள்ளனர். ஆனால் … Read more