தனது குழந்தையை கொடூரமாகத் தாக்கும் தாய் – வீடியோ வெளியானதால் பரபரப்பு!

தனது குழந்தையை கொடூரமாகத் தாக்கும் தாய் – வீடியோ வெளியானதால் பரபரப்பு!

தனது குழந்தையை தாய் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன் என்பவரின் மனைவி துளசி, தனது குழந்தையை தாக்கியதும், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது துளசி தனது இரண்டு வயது இளைய மகனை அடித்து துன்புறுத்தியதாக தெரிய வந்துள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவி துளசியை ஆந்திராவில் உள்ள தாய் வீட்டில் விட்டு வந்த வடிவழகன், வீட்டில் இருந்த அவரது செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில் தங்களது இளைய மகனை, துளசி கொடூரமாக தாக்கும் வீடியோவை அவரே பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

தாய் தாக்கியதில் படுகாயம் அடைந்த குழந்தை சிகிச்சை பின் குணமடைந்து, உறவினர்களின் பராமரிப்பில் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குழந்தையை தாய் தாக்கிய சம்பவம் தொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில், துளசி மீது 3 பிரிவுகளில் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

மேலும், அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை ஆந்திராவுக்கு விரைந்துள்ளது. இதனிடையே, குழந்தையை தாய் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube