ஆரஞ்சு அலர்ட்! இந்த 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை வாய்ப்பு!

rain

நாளை (ஜனவரி 8)  செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளையும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதைப்போல, நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் … Read more

மிக கனமழை!! தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு அலர்ட்! எங்கெல்லாம் தெரியுமா?

Heavy Rain in Tamilnadu today

வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 7-ல் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

RAIN

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

tn rain

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்து இருந்தது . அதனை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை அடுத்த 3 மணி நேரத்திற்கு பொறுத்தவரையில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கோயம்புத்தூர் , தேனி ஆகிய  … Read more

அரசு உத்தரவை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை போலீசாரால் பறிமுதல் .!

தமிழக அரசின் உத்தரவை மீறி தென்காசி, செங்கோட்டையில் இந்து முன்னணி நிர்வாகிகள் வைத்த விநாயகர் சிலை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. விநாயக சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களை … Read more

புதிய மாவட்டமாக உதயமாகிறது தென்காசி..!!

நெல்லை மாவட்டத்தை இரண்டு பகுதியாக பிரித்து தென்காசியை தலைமை இடமாக கொண்டு 2 உதவி கோட்ட அலுவலகங்களும் மற்றும் 8 தாலுகாக்களும் இணைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. புதிய ஆட்சியராக அருண்சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி புதிய மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகின்ற 22 ம் தேதி தென்காசியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்குள்ளார் என்று கூறப்படுகிறது.