இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! இந்தந்த பகுதிகளுக்கு மட்டும் தான்!

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, ராணிப்பேட்டையில் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு, காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு … Read more

#BREAKING: மேலும் 2 மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு!

மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் எதிரொலியால் 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, … Read more

தொடர் கனமழை எதிரொலி.! திருவள்ளூரில் 1155 ஏரிகளின் தற்போதைய நிலைமை.!

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1155 ஏரிகளில் 119 ஏரிகள் 100 சதவீதமாக முழுவதுமாக நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி தற்போது அதிலிருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே போல் திருவள்ளூர் மாவட்டதில் உள்ள  நீர்நிலைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது . அதில், மொத்தமுள்ள 1155 ஏரிகளில் 119 ஏரிகள் 100 சதவீதமாக … Read more

ரெட் அலர்ட் எச்சரிக்கை.! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.  நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை அடுத்து நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

#BREAKING: திருவள்ளூர் மாணவி தற்கொலை – காவல் அதிகாரிகள் விசாரணை!

திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட தனியார் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை. திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கிராம மக்கள் சாலை மறியல் … Read more

கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10,000 பரிசு – திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி!

போதைப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக ரகசிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருள் விநியோகம் குறித்து ரகசிய தகவல் தெரிவித்தால் ரூ.10,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாவட்ட எஸ்.பி வருண்குமார் தெரிவித்துள்ளார். கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குறித்து 63799 04848 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தல் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் … Read more

#BREAKING தாய்,மகள் மரணம்..முதல்வர் ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: திருவள்ளூர் மாவட்டம் நொளம்பூர் அருகே மழைநீர் கால்வாயில் இருசக்கர வாகனத்தில் சென்ற கரோலின் பிரமிளா, அவரது மகள் ஈவிலின் கெசியா ஆகியோர் 6ஆம் தேதி உயிரிழந்தனர். இந்நிலையில், பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுவிட்டுள்ளார்.  

திருவள்ளூரில் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் மறுப்பு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழக முழுவதும் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகிறது. தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் படத்தின் வசூலில் 50% -ஐ அளித்தால் விபிஎப் கட்டணத்தை … Read more

பணத்திற்காக உறவினர் மகனை கடத்தியவர் கைது..!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் வசித்து வந்தவர் முபாரக் இவர் அப்பகுதியில் இறைச்சிக் கடை ஒன்று வைத்துள்ளார் இவருக்கு ஷபியா என்ற மனைவி உள்ளார் மேலும் இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர் இந்நிலையில் இவருடைய கடைசி மகனான அசாருதீன் நேற்று மதியம் வீட்டிற்கு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த முபாரக் அக்கம் பக்கத்தில் தனது குழந்தையை தேடியுள்ளார், அப்பொழுது குழந்தை கிடைக்கவில்லை மேலும் திடீரென அப்பொழுது முபாரக்கிற்கு ஒரு மர்ம நபர் ஒருவர் கால் … Read more

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 3வயது குழந்தை மாயம்.! ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.!

குழந்தையை கடத்தி வைத்து பெற்றோரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர். கே. பேட்டையை சேர்ந்தவர் முபாரக். இவரது 3 வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். அதனையடுத்து குழந்தையை தான் கடத்தி வைத்திருப்பதாகவும், ஒரு கோடி பணம் தந்தால் குழந்தையை திருப்பி தருவதாகவும் கூறி ஒருவர் முபராக்கின் மொபைல் எண்ணிற்கு அழைப்பு விடுத்து கூறியுள்ளார். உடனடியாக ஆர். கே. பேட்டையில் … Read more