விழுப்புரம் அருகே காதலியை சுட்டுக்கொன்று விட்டு, காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அடுத்த அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவியான சரஸ்வதியும், வேலூர் பெட்டாலியன் பிரிவில் காவலராக இருந்த கார்த்திக் வேலனும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சரஸ்வதியின் பிறந்த நாளை கொண்டாட கார்த்திக் வேலன் அன்னியூர் சென்றுள்ளார். நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி, கார்த்திக் வேலன் தாம் வைத்திருந்த துப்பாக்கியால், காதலி […]
மதுரை, சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததுள்ளது இதனால் மக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் மதுரையில் நேற்று இரவு நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. 2 மாவட்டங்களை தொடர்ந்து விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மின்னல் தாக்கி மூன்று பெண்கள் உட்பட […]
விழுப்புரம், செப் -விழுப்புரத்தில் நடை பெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, மத்தியில் இருக்கிற மதவாத பா.ஜ.க. அரசைத் தூக்கி எறியும் மாபெரும் சக்தி வாய்ந்த தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் உருவாகி இருக்கிறார் என்று குறிப்பிட்டார். விழுப்புரம் திமுக முப்பெரும் விழாவில் துணைப் பொதுச் செயலாளர் வி.பி.சாமி பேசியதாவது:- தலைவர் கலைஞர் அவர்கள் கழகத் தலைவராக இருந்தபொழுதும் சரி, முதலமைச்சராக இருந்த பொழுதும் சரி – அவர்களுக்கு என்னென்ன வகையான […]
விழுப்புரம்: ஆண்டுதோறும் ஜுன் 3-ம் நாள் தமிழ் செம்மொழி நாள் என அழைக்கப்படும் என்று விழுப்புரத்தில் நடைபெற்று வரும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக சார்பில் ஆண்டுதோறும் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்றும், கலைஞர் அறக்கட்டளை சார்பில் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கட்சியின் நிறை, குறைகளை யார் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கூறலாம் என்று தெரிவித்த ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு முடிவு […]
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்று குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என்று தெரியவந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழகுண்டூர் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி தனலட்சுமி என்ற பெண் தனது வீட்டிற்கு தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டார். அவருடன் சேர்த்து மூன்று குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் வரதட்சனை கொடுமையால் நடந்த நிகழ்வு என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா அத்தியூர் திருக்கை கிராமத்தில் தலித் இளைஞன் பிரபு பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூகத்தை சேர்ந்த சரண்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 .2.2018 அன்று இரவு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சுமார்200பேர் கொண்ட கும்பல் தலித் மக்களின் சுமார் 60 வீடுகளில் தாக்குதல் நடத்தி தலித் மக்களின் பொருட்களை நாசப்படுத்தி யுள்ளனர். கண்ணில் கண்டவர்களை எல்லாம் அடித்து உததைத் துள்ளனர். டிவி, கேஸ் அடுப்பு, பீரோ, கட்டில் உள்ளிட்ட பண்ட பாத்திரங் களை […]
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ். கள்ளக்குறிச்சியில் இருந்து தென்கீரனூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை, அண்ணாநகர் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே வழிமறித்த கும்பல், சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயங்களைச் சேகரித்து வரும் போலீசார், அவரது கொலைக்கான காரணம் குறித்தும், […]