நெல்லை மாவட்டம் அருகே சிறுத்தைகளை பிடிக்க கூண்டு! வனத்துறையினர் நடவடிக்கை…

நெல்லை மாவட்டம் வடகரை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணைப்பகுதியை சேர்ந்தவர் காஜா மைதீன். இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 15-ந்தேதி காலையில் இவர் ராயர்காடு பகுதியில் மேய்ச்சலுக்கு ஆடுகளை விட்டு இருந்தார். அப்போது புதருக்குள் இருந்து வந்த 2 சிறுத்தைகள், ஆடுகள் மீது பாய்ந்து தாக்கின. ஒரு ஆட்டை அடித்துக் கொன்று தின்றன. மேலும் 2 ஆடுகளை அடித்துக் கொன்று காட்டுக்குள் இழுத்து சென்று விட்டன. ஒரு ஆடு காயத்துடன் தப்பி ஓடி வந்து … Read more

திருச்செந்தூரில் 108 பேர் மீது வழக்குப்பதிவு!

திருச்செந்தூர் சுப்பிரமணிசுவாமி கோவில் பிரகாரம் இடிந்து விழுந்ததில் பலியானவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 108 பேர் மீது வழக்குப்பதிவு!

காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம்!

உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், மூவிருந்தாலியில் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

சென்னை,கோவை,நெல்லை பகுதியிலிருந்து புறப்படும் வெளிமாநில ரயில்களின் நேரத்தை அதிரடியாக மாற்றியது ;தெற்கு ரயில்வே

சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை காலை 7.15க்கு புறப்பட வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 9.15க்கு புறப்படும்.அதேபோன்று நெல்லையிலிருந்து நாளை காலை 7.20க்கு புறப்பட வேண்டிய தாதர் வாராந்திர விரைவு ரயில் 8.50க்கு புறப்படும். கோவை – சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில் நாளை மாலை 3.25க்கு பதில் மாலை 5.25க்கு புறப்படும் .மேலும் கோவை விரைவு ரயில் நாளை பிற்பகல் 2.55க்கு பதில் மாலை 5.10க்கு சென்னைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது

திருச்செந்தூர் அருகே டிவி பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம்  வீடுபுகுந்து ரூ.1.40 லட்சம் நகை கொள்ளை!

வீரபாண்டியன்பட்டணத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம்  வீடுபுகுந்து ரூ.1.40  லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம், மெடனா தெருவைச் சேர்ந்தவர் சேசைய்யா (80). இவரது மனைவி எல்ஜின் அகாட்டார் (76). இவர்களுக்கு 2மகன், 2மகள் உள்ளனர். இதில் இளைய மகன் விக்னேசியஸ்(40)காயல்பட்டினத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவருடன் சேசைய்யா, எல்ஜின் அகாட்டார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இரவில் எல்ஜின் அகாட்டார் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். கணவர் … Read more

துாத்துக்குடியில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்லும் இளைஞர்களை கண்டறிந்து காவல்துறை விழிப்புணர்வு!

துாத்துக்குடியில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்லும் இளைஞர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்து அவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. துாத்துக்குடி நகரில் வேகமாக இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் அதிகரித்து விட்டனர்.இதனால் மற்றவர்களுக்கு இடையூ றாகவும் விபத்து ஏற்படுத்தும் விதமாக இருந்தது.இது குறித்து மாவட்ட எஸ்பி.மகேந்திரன் அறிவுரையின்படி ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம் நகரில் வேகமாக செல்லும் இளைஞர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தினார்.இதில் 30 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.வேகமாக செல்வது … Read more

நெல்லையில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி போராட்டம்!

திருநெல்வேலியில்  காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும், இறந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க கோரி கூத்தன்குழியில் மீனவ மக்கள் பேரணியாக சென்று கடலில் இறங்கி போராட்டம்.

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!வானிலை மையம் தகவல் …

வங்க கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மீனவர்கள் போராட்டம் !

ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக் கோரி பல்வேறு பகுதியில் மீனவர்கள் போராட்டம். திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் போராட்டம்.

ஒகி புயலால் காணமல் மீனவர்களை மீட்கக்கோரி கன்னியாகுமரியில் போராட்டம்!

ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக் கோரி கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவிலில் கடலில் இறங்கி 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டம்