இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள்: கனிமொழி எம்.பி பேச்சு

மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது. உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும். இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் மக்களவை தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் திருநெல்வேலியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “ புரியாத மொழிகளில் மத்திய அரசின் திட்டங்கள் உள்ளதோடு மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளிலும் … Read more

பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் – நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!

பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் மார்க்ரெட் தெரசா என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது ஆறுமுகம் என்ற நபர், உதவி ஆய்வாளரைக் கத்தியால் வெட்டியதையடுத்து, அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைத் தாக்கிய ஆறுமுகம் என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண் … Read more

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர்…உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு….!!

நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசு அடைகின்றது என பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசு அடைவது தொடர்பாக மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் ராமையன்பட்டியை சேர்ந்த  காட்டுராஜா என்பவர் வழக்கு தொடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணையை அடுத்து தாமிரபரணி ஆற்றில் எங்கெங்கு எல்லாம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். மேலும் கழிவுநீர் கலப்பது … Read more

நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், ஏராளமான மீனவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்….!!

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், ஏராளமான மீனவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். தமிழகத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மீனவர்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி மாதம் தோறும் நடைபெறுவது வழக்கமான நடைமுறையாகும். அதன்படி ராதாபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடத்தின் கூட்ட அரங்கில் மீனவர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில் இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், உவரி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தூண்டில் வளைவு அமைத்து, கடல் … Read more

நெல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு…

தமிழகத்தில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக இயற்கை மற்றும் சுற்றுசூழல் மேம்பாட்டு சங்க துணை தலைவர் சிதம்பரம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டம் புளியங்குடி, சொக்கம்பட்டி கிராமங்களில் கொட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக சுற்றுவட்டாரத்தில் வசிக்க கூடிய மக்களுக்கு … Read more

5 ஆண்டு காதல்…..ரூ.10,00,000….13 சவரன் நகை சுருட்டிய களவாணி காதலி…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலனை ஏமாற்றி 10 லட்சம் ரூபாய் பறித்த இளம்பெண் கணவருடன் கைது செய்யப்பட்டார். வள்ளியூரை சேர்ந்த உமா என்பவர், நாகர்கோவிலில் இருசக்கர வாகன ஷோரூமில் வேலை பார்த்தபோது, சோதிரி ராஜா என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில், இரண்டு மாதத்திற்கு முன்பு, தளபதி சமுத்திரத்தை சேர்ந்த சிவா என்பவரை உமா திருமணம் செய்துள்ளார். இதையடுத்து, உமாவிடம் கொடுத்த ஏடிஎம் கார்டு மற்றும் 13 சவரன் நகையை சோதிரி ராஜா திருப்பி கேட்டுள்ளார்.அவரை உமாவின் … Read more

விபத்து 1 1/2 வயது குழந்தை உட்பட இருவர் பரிதாபமாக பலி..!!

நெல்லை அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் மருதம்நகர் ஈசுவரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தனசேகர் (வயது 25). இவருடைய மனைவி சிவரஞ்சனி (21). இவர்களுக்கு பாலமுகில் (2½) என்ற மகனும், புகல்யா (1½) என்ற மகளும் உண்டு. இவர்கள் உறவினர் திருமணம் விழாவில்  கலந்து கொள்வதற்காக சிவரஞ்சனி தனது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன்  ஆட்டோவில் சிங்கிகுளத்திற்கு சென்றார். ஆட்டோவை வனராஜ் … Read more

நெல்லையில் திறக்கப்பட்டது “நீட்”பயிற்சி மையம்..!!

நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரத்தில் பள்ளியை தரம் உயர்த்தும் விழா மற்றும், நீட் தேர்வு மையம் திறப்பு விழா , அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழா என்ற முப்பெரும் நடைபெற்றது இவ்விழாவினை அமைச்சர் செங்கோட்டையன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் . நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நீட் பயிற்சி மையத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். மேலும் தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்கு தயார் செய்யும் வகையில் 412 பயிற்சி … Read more

TTV தினகரன் கனவு பலிக்காது..!! துணை முதல்வர் பரபரப்பு பேட்டி

நெல்லை: தினகரன் தான் வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கின்றார் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள  சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாளான இன்று நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன்  சிலைக்கு மரியாதையை செலுத்த தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வருகை புரிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் கூறியதாவது.., டிடிவி தினகரன் பகலில் வானத்தை அண்ணாந்து  பார்த்துக் கொண்டு, பகல் கனவு … Read more

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் தீவிபத்து…!!

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளது.உடனே பாளையங்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைத்தனர்.