இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள்: கனிமொழி எம்.பி பேச்சு

மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது. உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும். இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் மக்களவை தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் திருநெல்வேலியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “ புரியாத மொழிகளில் மத்திய அரசின் திட்டங்கள் உள்ளதோடு மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. பாஜகவுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒரு பைசா நிதி கூட தராமல் மோடி அரசு வஞ்சிக்கிறது, தமிழ் பழமையான மொழி என்பது மோடி சொல்வதற்கு முன்னரே எங்களுக்கு தெரியும்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்குகள் ரத்து

இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள், இந்தியா கூட்டணி, ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும், கோவில் கோவிலாக சென்ற பிரதமர் ஒரு முறையாவது பற்றி எரியும் மணிப்பூருக்கு செல்லவில்லை. மத்திய அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, நிறைவேற்ற போவதும் இல்லை. அறிவித்த ரூ. 15 லட்சம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. நாட்டிற்கே உணவளிக்கும் விவசாயிகளை தீவிரவாதிகளை போல நடத்தும் ஆட்சி தான் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி” என்றார்.

Leave a Comment