#BREAKING: மூலப் பொருட்களை விற்க அனுமதி தேவை – வேதாந்தா நிறுவனம்

ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள ரூ.200 கோடி மூலப்பொருட்களை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதுதொடர்பாக வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள ரூ.200 கோடிக்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் இருக்கிறது என்றும் மூலப்பொருட்களை எடுத்து விற்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வேதாந்தா நிறுவனம் தரப்பு வாதமாக முன்வைத்தது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க … Read more

அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது – ஐகோர்ட் கிளை

கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என உயர்நீதிமன்றம் கிளை கருத்து. தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலை நிர்ணயபடி தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கின்றனவா? என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவதை முறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் … Read more

பதிவான வீடியோக்கள் எங்கே..??அவகாசம் வேணும்-அடிபணிந்த ஆணையம்..அளிக்கமுடியாது-கோர்ட் அதிரடி

வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள கண்காணிப்பு கேம்ராவில் பதிவான வீடியோ நகலை சமர்பிக்க நீதிபதிகள் உத்தரவு வீடியோக்களை சமர்பிக்க ஆணையத்தால் கால அவகாசம் மேலும் மேலும் கேட்கப்பட்ட நிலையில் நீதிபதிகள் கால அவகாசம் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.   தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது 2 கட்டங்களாக கடந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்டது.வாக்கு எண்ணிகையானது ஜன.,2 தொடங்கி நடைபெற்றது இந்த வாக்கு எண்ணிக்கையில் பல குளறுபடிகள் நடந்து அங்கு வாக்கு எண்ணும் … Read more

நெல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு…

தமிழகத்தில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக இயற்கை மற்றும் சுற்றுசூழல் மேம்பாட்டு சங்க துணை தலைவர் சிதம்பரம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டம் புளியங்குடி, சொக்கம்பட்டி கிராமங்களில் கொட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக சுற்றுவட்டாரத்தில் வசிக்க கூடிய மக்களுக்கு … Read more

“தமிழக மரங்கள் பாதுகாப்பு சட்டம் கர்நாடகத்தை போல்”வேண்டும் சுற்றுச்சுழல்-வனத்துறை உங்கள் பதில் என்ன..?உயர்நீதிமன்ற கிளை…!!

தமிழகத்தில் மரங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்த படுகிறது அதனை போன்று தமிழகத்திலும் மரங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 150 ஆண்டுகள் பழமையான வேப்பமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து … Read more

“மாணிக்கவாசகர் வகித்த மதுரை ஆதினம் நித்தியானந்தாவிற்கே”..!ஆதின தடை நீக்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…!!

மதுரை இளைய ஆதினமாக நித்தியானந்தா தொடர விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்ரவிட்டுள்ளது. மதுரை ஆதீன மடத்தின், 293ஆவது ஆதீனமாக, நித்யானந்தாவை கடந்த 2012ஆம் ஆண்டு அருணகிரிநாதர் நியமனம் செய்தார். இதை எதிர்த்து தொடரபட்ட வழக்கை விசாரித்த மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில் மதுரை ஆதின மடத்தின் 293 ஆவது ஆதினமாக நித்யானந்தா நியமனத்த தடைவிதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற … Read more

“மணல் கொள்ளை”வாகனத்துக்கு மரணடி அடி…!!உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

மணல் திருட்டு குறித்து பொதுநல மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மணல் திருட்டில் ஈடுபட்டு பிடிபட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். மேலும் வாகன உரிமையாளர்கள் அபராத தொகையை செலுத்தினாலும் அவர்களிடம் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தை ஒப்படைக்ககூடாது. ஆனால் மாட்டு வண்டிகள் பிடிபட்டால், மாடுகளை மட்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கலாம்.வண்டிகளை ஒப்படைக்க கூடாது என்று காட்டமாக தெரிவித்தது மேலும் இது குறித்து உள்துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. DINASUVADU

பெட்ரோலிய குழாய்களை “எண்ணூர் – தூத்துக்குடி” வரை பதிக்க தடை..!!உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!

எண்ணூர் – தூத்துக்குடி பெட்ரோலிய குழாய்களை பதிக்க, தனியார் நிலத்தை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் தூத்துக்குடி சில்கான்பட்டி பகுதியில் சரக்கு முனையம் அமைப்பதற்கு, தங்களது சொந்த நிலத்தில் கட்டுமான பணிகளை தொடங்கியது. இந்நிலையில் எண்ணூர் – தூத்துக்குடி வரை பெட்ரோலியம் மற்றும் கனிமங்களை கொண்டு செல்லும் திட்டம் குறித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் … Read more

விளைநிலங்களில் காற்றலை அமைப்பதற்கு இடைக்கால கேட் போட்டது..!உயர்நீதி மன்ற கிளை..!தூத்துக்குடி-நெல்லை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு..!

தூத்துக்குடி பராக்கிரமபாண்டியன் பகுதியில் விவசாய நிலத்தில் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கயத்தாறு கீழப்பாறைப்பட்டியைச் சேர்ந்த எஸ்.கே.அருமைராஜ் என்பவர்   உயர்நீதிமன்ற கிளையில்வழக்கு தொடர்ந்தார். இதனை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளைவிதிகளை மீறி  நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் காற்றாலைகள் அமைக்கப்படுவதாக மனுவில் குற்றச்சாட்டுப்பட்டுள்ளது. இது தொடர்பாக  தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுட்டும் இடைக்கால தடை விதித்தும் வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை. DINASUVADU