அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு நாளை விசாரணை!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரிக்கப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், டீக்காராமன் அமர்வில் நாளை விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிடக்கோரி … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மனுக்கள் நாளை விசாரணை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மனுக்கள் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், தமிழக அரசின் முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு என வேலுமணி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தன் … Read more

வேலுமணி வழக்கு – தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

எஸ்பி வேலுமணி தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்பான வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்ற.  டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணியின் மனுவை உயர்நீதிமன்ற அமர்வு விசாரிப்பதற்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு … Read more

#BREAKING: முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நிறைவு!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு. கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தற்போது நிறைவு பெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தது. தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடைப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.பி.வேலுமணி அமைச்சராக … Read more

பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு!

கோவையில் பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு. கோவையில் பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் இன்று காலை முதல் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றது. சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் லேப்டாப் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, அவரது நண்பர்களான சந்திர பிரகாஷ், சந்திர சேகர் … Read more

#BREAKING: நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை – ஈபிஎஸ் கண்டனம்!

திமுக அமைச்சருக்கு எதிராக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பினை திசை திருப்பவே நடத்தும் நாடகம் லஞ்ச ஒழிப்பு சோதனை என ஈபிஎஸ் கண்டனம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் புனைந்து, பழிவாங்கும் … Read more

#BREAKING: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு – அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர் கைது!

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட தொண்டர்கள் கைது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதால், கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு தொண்டர்கள் திரண்டுள்ளனர். அப்போது, காவல்துறைக்கும், வீட்டின் முன்பு திரண்டுள்ள ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கோவையில் வேலுமணி வீட்டில் நடந்து வரும் … Read more

ஒரே நேரத்தில் இரு முன்னாள் அமைச்சர்களின் இடங்களில் அதிரடி சோதனை… லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.!

ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடைப்படையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி … Read more

#BREAKING: அமைச்சர் கேஎன் நேரு மீதான வழக்கு ரத்து!

தமிழநாடு அமைச்சர் கேஎன் நேரு மீது அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து.  அமைச்சர் கேஎன் நேரு மீது அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்து 2020-ல் கோவை பொதுக்கூட்டத்தில் எஸ்பி வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக கோவை நீதிமன்றத்தில் கேஎன் நேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கேஎன் நேரு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என … Read more

#BREAKING: வேலுமணி வழக்கு – அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு!

உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் என தமிழக அரசு தகவல். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்சஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலுமணி தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளதால் உயர் நீதிமன்றம் விசாரிப்பது சரியாக இருக்காது என வாதம் வைக்கப்பட்டது.தன் மீதியான … Read more