அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு நாளை விசாரணை!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரிக்கப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், டீக்காராமன் அமர்வில் நாளை விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிடக்கோரி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜுன்னா முறையீட்டை ஏற்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மனுக்களை மாற்றிய நிலையில், அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்திலேயே இடைக்கால நிவாரணம் வழங்க தடை உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment