டெல்லியில் பயங்கரம், சாலையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி!

டெல்லியில் சாலை டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் 6 பேர் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி, சீமாப்பூர் சாலையில் கட்டுப்பாடின்றி வேகமாக வந்த லாரி ஒன்று சாலையின் டிவைடரில் தூங்கி கொண்டிருந்த 6 பேர் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அதிகாலை 1:51 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டதாகவும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும்  போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

author avatar
Varathalakshmi

Leave a Comment