முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மனுக்கள் நாளை விசாரணை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மனுக்கள் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை.

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், தமிழக அரசின் முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு என வேலுமணி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான இரு வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி மனு தொடுத்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment