அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மனுக்கள் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை.
தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், தமிழக அரசின் முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு என வேலுமணி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான இரு வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி மனு தொடுத்திருந்தார்.