பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு!

கோவையில் பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு.

கோவையில் பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் இன்று காலை முதல் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றது. சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் லேப்டாப் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, அவரது நண்பர்களான சந்திர பிரகாஷ், சந்திர சேகர் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது. இன்று காலை முதல் அவர்களது இல்லத்திலும், அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது சந்திர சேகர் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைத்துள்ளது. மேலும், எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தற்போது வரை நடைபெற்று வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment