மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பரபரப்பு..!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இந்தியில் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெயரை தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும்  என எழுதப்பட்டு இருந்தது. இதுவரை தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே மாவட்டத்தின் பெயர் எழுதப்பட்டு வந்தது. ஆனால், முதல்முறையாக இந்தியில்  மாவட்டத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளதால் பரபரப்பு  ஏற்பட்டது.

தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கி தற்கொலை செய்த இளைஞர்..!

குடும்பப் பிரச்னையில் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கிய இளைஞர், துாக்கிட்டுத் தற்கொலை செய்த்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் இவர் 19 வயதான சதீஸ்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐடிஐ நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார், இந்நிலையில் கடந்த 18ம் தேதி சதீஸ்குமார் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இதனால் சதீஸ்குமாரை அவரது சகோதரர் மற்றும் தந்தை அடித்துள்ளனர் இதனால் சோகமடைந்த சதீஸ்குமார் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் … Read more

அறந்தாங்கி சிறுமி கொலை..”நெஞ்சை பதறச் செய்கிறது” கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர்

அறந்தாங்கியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குறித்து முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் காணாமல் போன அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில், பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த  வழக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் … Read more

காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்த போலீஸ்.!

தூத்துக்குடி மாவட்டம் அருகே 25 வயது போலீஸ் ஒருவர் தான் காதலிக்கும் பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்காதததால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் அடுத்த புதுக்கோட்டை அருகிலுள்ள கீழ செக்காரக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா இவருடைய மகன் ராமச்சந்திரன் வயது 25 இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆயுதப்படை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் கடந்த 6ம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார் , மேலும் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு … Read more

இளம்பெண்ணை வன்கொடுமை செய்து விட்டு உங்களை மகள் என் வீட்டில் இருக்கிறாள் கூறிவிட்டு தப்பியோடிய இளைஞர்.!

20 வயது மதிப்புத்தக்க இளம்பெண்ணை  இயற்கை உபாதை கழிக்க சென்றபோது இளைஞர் ஒருவர் தூக்கி சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் சென்றபோது உங்கள் மகள் எனது வீட்டில் இருக்கிறாள் என கூறிவிட்டு தப்பியோடி விட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தை சார்ந்த 20 வயது மதிப்புத்தக்க இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது இந்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தூக்கி சென்று தனது … Read more

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய ஹெச்.ராஜா ..!குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசினார். இது தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்றார் .அப்பொழுது அவர் நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறை குறித்தும் இழிவான சொற்களில் விமர்சனம் செய்தார்.இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால் திருமயம் போலீசார்  நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 … Read more

Breaking:கனமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

வடகிழக்கு மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில்  உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், வடலூர் கல்விமாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் இதை தொடர்ந்து 5 வது மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.தென்தமிழகத்தில் மேலும் இரண்டு நாள்களுக்கு … Read more

பல இடங்களில் கனமழை – 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் 4 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய  பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.குறிப்பாக கடலூர்,நாகை,திருவாரூர்,தஞ்சை ,கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதற்காக  ஆட்சியர் உமா மகேஷ்வரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே தொடர் மழை காரணமாக … Read more

தொடர் மழை எதிரொலி !புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை  தொடங்கவுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக  மிதமான மழை பெய்து வருகிறது.நேற்றும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்திலும்  நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.இன்றும் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது,புதுக்கோட்டை  மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக  அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே இடி தாக்கி 4 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே  இடி தாக்கியதில்  4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள்  தொடங்கவுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.இதனையொட்டி இன்று  புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்டோர் மீது இடி  தாக்கியது.இதில் 4 பேர் பரிதமாக உயிரிழந்துள்ளனர். இதில்  காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.