650 காளைகளும், 350 காளையர்களும்.. விறுவிறுப்பாக தொடங்கிய புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு!

puthukottai jallikattu

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சியாக நடைபெறும். அந்தவகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் தொடக்கம் முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக, தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. அதன்படி, இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே பல பகுதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில் தச்சங்குறிச்சியில் கடந்த ஜன.6ம் தேதி தொடங்கி … Read more

புதுக்கோட்டை விபத்து! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

mk stalin

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா நமணசமுத்திரம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (30.12.2023) அதிகாலை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து மூன்று வெவ்வெறு நான்கு சக்கர வாகனங்களில் வெவ்வேறு கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தவர்கள். தேநீர் அருந்துவதற்காக சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்துள்ளார்கள். தேநீர் அருந்திகொண்டிருந்தபோது, சிமெண்ட் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து … Read more

#JustNow: ரூ.7 கோடி முறைகேடு – 25 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 25 அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வீடு கட்டாமலேயே கட்டியதாக ரூ.7 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 2016 முதல் 2020 வரை அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் 480 வீடுகள் கட்டியதாக மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 480 வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு ரூ.7 கோடி வரை பணம் தந்து மோசடி செய்ததாக 25 அரசு ஊழியர்கள் … Read more

மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட் ..!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது விற்பனை குறித்து கண்பார்வையற்ற இளைஞர் சங்கர்  தொடர்ந்து புகார் அளித்ததால் காவலர்கள் அவரை லத்தியால் தாக்கியுள்ளனர். மாற்றுத்திறனாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்குதல் நடத்தியதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. கண்பார்வையற்ற சங்கரை அழைத்துசென்று லத்தியால் தாக்கிய புகாரில் 3 போலீசார் மீது  எஸ்.பி நிஷா பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி,  செந்தில், அசோக், பிரபு ஆகிய 3 போலீசாரை … Read more

பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேலப்பட்டு  கிராமத்தை சேர்ந்தவர் ஜெயா. இவருக்கு வயது (45). கடந்த 2019 -ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் (20) ஜெயாவை  வற்புறுத்தி  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து ஜெயா அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுரேந்தரை அனைத்து  மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை … Read more

#Breaking:கீரமங்கலம் பேரூராட்சி திமுக துணைத் தலைவர் ராஜினாமா!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை திமுகவின் தமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை தேர்தல் நடத்தும் அலுவலரும்,பேரூராட்சி செயல் அலுவலருமான செந்தில் குமாரிடம் அவர் அளித்துள்ளார். கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவி கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(சிபிஐ) ஒதுக்கப்பட்ட நிலையில், முன்னதாக நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் சிபிஐ வேட்பாளர் முத்தமிழ் செல்வியை எதிர்த்து தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். இதனையடுத்து,கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் உடனே … Read more

1 கோடி ரூபாய் நகைக்கடன் முறைகேடு – கூட்டுறவு வங்கி அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!

புதுக்கோட்டை:கீரனூர் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் முறைக்கேட்டில் ஈடுப்பட்டதாக எழுந்த புகாரில் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ.1.8 கோடி நகைக்கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுப்பட்டதாக கூறி வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Breaking:எஸ்.எஸ்.ஐ. படுகொலை – 6 பேரிடம் தீவிர விசாரணை!

புதுக்கோட்டை:சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன்,இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார்.அப்போது அவர்  திருடர்களை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில்,அவர்களுக்கும் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும்.இதில் அவர்கள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் … Read more

#Breaking:புதுக்கோட்டையில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

புதுக்கோட்டையில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.மேலும்,வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10 ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில்,தொடர் மழை காரணமாக தொடர் மழை காரணமாக புதுக்கோட்டையில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள … Read more

இரு வெவ்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 56 கிலோ கஞ்சா.!

புதுக்கோட்டையின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இருந்து 56 கிலோ கஞ்சாவை மீனவர்கள் மீட்டு கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைத்தனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு புதுக்குடி கிராமத்திலிருந்து சில மீனவர்கள் பாலமுருகன் என்பவரது பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது,உப்பு படிவத்துடன் சாக்குப் பொட்டலம் ஒன்று மிதந்து வருவதை கண்டுள்ளனர் . அதனை மீட்டு கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் பிரித்து போது கஞ்சா பொட்டலங்கள் … Read more