பாய்லர் வெடித்ததில் பாகிஸ்தானில் 4 பேர் பலி..!

பாகிஸ்தானில் உள்ள கசூர் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை ஓன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அங்கு இருந்த பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது . இந்த தீ விபத்தில் சிக்கி  9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். மீதம் இருந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் தொழிற்சாலையின் … Read more

டெல்லி வன்முறை: பாகிஸ்தான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இம்ரான்கான்.!

டெல்லியில் அரங்கேறி வன்முறை சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார்.அதில் “வெறுப்பு அடிப்படையிலான இனவாத சித்தாந்தங்கள் தலைதூக்கினால், அது ரத்தம் சிந்துதலையே ஏற்படுத்தும். என கூறினார். Today in India we are seeing the Nazi-inspired RSS ideology take over a nuclear-armed state of over a billion people. Whenever a racist ideology based on … Read more

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனுக்கு கவுரவ குடியுரிமை வழங்கிய பாகிஸ்தான்.! காரணம் என்ன தெரியுமா..?

மற்ற வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவிக்கும் நிலையில்  கடந்த 2016-ம் ஆண்டு முதல் டேரன் சேமி விளையாடி வருகிறார். தொடர்ந்து பயணம் செய்து விளையாடி டேரன் சேமி அவருக்கு பாகிஸ்தான் கவுரவ குடியுரிமை வழங்க முடிவு செய்து உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி விளையாடியது. அப்போது இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6  பாதுகாப்பு படையினரும் , 2 பொதுமக்களும் இறந்தனர். … Read more

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால் பாகிஸ்தான் வீரருக்கு 17 மாத சிறை தண்டனை.!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சகவீரர்களை ஊழலில் (மேட்ச்பிக்சிங்) ஈடுபடத் தூண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட்டுக்கு 17 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பிப், மாதம் ஜாம்ஷெட், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யூசுப் அன்வர் மற்றும் முகமது இசாஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சகவீரர்களை ஊழலில் (மேட்ச்பிக்சிங்) ஈடுபடத் தூண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட்டுக்கு 17 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. … Read more

உலக கோப்பை இறுதிப்போட்டியில் நுழையுமா?இந்தியா..இன்று பங்காளி பாகிஸ்தானோடு பலபரீச்சை

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது இன்று இந்திய -பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைய பலபரீச்சை  நடத்துகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. கேப்டன் பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறியது. அதன்படி இந்திய அணி தான் எதிர்கொண்ட லீக் ஆட்டங்களில் இலங்கை அணியை … Read more

ஜெர்சியை கழற்றி எங்கய்யா கொழுப்பு இருக்கு!? நல்லா பாரு..பயிற்சியாளரிடம் பாகிஸ்தான் வீரர் பயங்கரம்

உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் உமர் அக்மல் பயிற்சியாளரை நோக்கி ஜெர்சியை கழற்றிவிட்டு கொழுப்பு எங்கே இருக்கிறது? என்று கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் உமர் அக்மல். இவர் ஒழுங்கீனம் மற்றும் உடற்தகுதி போன்ற பிரச்சனை காரணமாக சர்வதேச அணியில் விளையாட முடியாமல் தற்போது இருந்து வருகிறார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அன்மைக்காலமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் … Read more

இந்தியாவின் தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்.! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாராட்டு.!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி சமனில் முடிய,சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்று, டி-20 போட்டி தொடரை கைப்பற்றியது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டான் இன்சமாம் உல் ஹக் இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து, இந்தியாவின் தொடர் வெற்றிக்கான காரணங்களையும் தெரிவித்தார். இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் தொடர், 2 டெஸ்ட் போட்டியில் … Read more

தொடர்ந்து வரும் அவலம்.! இந்து பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம்.!

கடந்த 14-ம் தேதி சிந்து மாகாணத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டனர். அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சில தினங்களுக்கு முன் சிந்து மாகாணத்தில் திருமணத்தின்போது மணப்பெண்ணை கடத்தி சென்று மதம் மாற்றம் செய்து  சாருக் குல் என்ற இளைஞர் திருமணம் செய்து  கொண்டார். பாகிஸ்தானில் உள்ள இந்து பெண்கள் கடத்தப்பட்டு , அவர்களை கட்டாயமாக மத மாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாக அமெரிக்காவை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று கூறியுள்ளது. இந்துகள் அதிகம் வாழும் … Read more

பாகிஸ்தானில் சுட்டு கொல்லப்பட்ட சீக்கிய வாலிபர்! நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்!

பாகிஸ்தானில் பர்வீந்தர் சிங் என்ற சீக்கியர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்தார். இது குறித்து விசாரிக்கையில் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் இச்செயலை செய்தது தெரியவந்தது. பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் எனும் இடம் அருகில் பர்வீந்தர் சிங் என்ற இளைஞர் உடம்பில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. அவருக்கு வரும் ஜனவரி 28ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. … Read more

இறந்துவிட்டதாக கூறிய இளம்பெண் இறுதி சடங்கில் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் ஷாக்-அரேங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையால் சான்றளிக்கப்பட்ட ஒரு இளம் பெண் இறுதி சடங்கின் போது உடலில் உயிர் இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் அனுமதித்த அதிர்ச்சி.  இச்சம்வமானது பாகிஸ்தானில் உள்ள காராச்சியில் நடைபெற்றுள்ளது.இதனால்   அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது பாகிஸ்தான் நாட்டில் அரேங்கேறி உள்ளது.இறந்துவிட்டதாக கூறப்பட்டவர் ரஷீதா என்கின்ற இளம்பெண் இவர் உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் உள்ள கராச்சி அப்பாசி சாகித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.ஆனால், சிகிச்சை … Read more