பாகிஸ்தானில் சுட்டு கொல்லப்பட்ட சீக்கிய வாலிபர்! நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்!

பாகிஸ்தானில் சுட்டு கொல்லப்பட்ட சீக்கிய வாலிபர்! நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்!

  • பாகிஸ்தானில் பர்வீந்தர் சிங் என்ற சீக்கியர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்தார்.
  • இது குறித்து விசாரிக்கையில் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் இச்செயலை செய்தது தெரியவந்தது.

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் எனும் இடம் அருகில் பர்வீந்தர் சிங் என்ற இளைஞர் உடம்பில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின.

அவருக்கு வரும் ஜனவரி 28ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அவருக்கு பிரேம்குமாரி  என்ற பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பெண் வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலுக்கு பர்வீந்தர் சிங் இடையூறாக இருப்பதாக எண்ணி அவரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார்.

சம்பவத்தன்று கூலிப்படை உதவியுடன் பர்வீந்தர் சிங்கை கொலை செய்துள்ளார். இந்த கொலைக்காக கூலிப்படையிடம் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது பிரேம்குமாரி கைது செய்யப்பட்டுள்ளார். இருந்த கொலையில் தொடர்புடைய கூலிப்படையை தீவிரமாகபோலீஸ் தேடி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube