சி.எஸ்.கே-வை விட்டு விலகும் ஜடேஜா.?! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.. ஆதாரம் வெளியிட்ட நெட்டிசன்கள்…

ஜடேஜா, தனது இணையதள பக்கத்தில் சென்னை அணி சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கியுள்ளாராம். மேலும், இந்த வருடம் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஜடேஜா சொல்லவில்லை.  ஐ.பி.எல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அணிகளில் மிக முக்கிய அணியாக கருதப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணியில் ஒருமுறை ஒரு வீரர் இருந்தாலே அவர் கூட எனக்கு பிடித்த அணி என்றால் சி.எஸ்.கே என கூறிவிடுவார். அந்த அணியில் மிக முக்கிய வீரர்களான தோனி, பிராவோ, ஜடேஜா, … Read more

#IPLAuction:ஐபிஎல் உரிமம் யாருக்கு? – தொடங்கியது மெகா ஏலம்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட T20 தொடர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ், வியாகாம் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. இந்த வேளையில்,இந்தியன் பிரீமியர் லீக் மீடியா உரிமை ஏலப் போட்டியில் இருந்து அமேசான் வெளியேறியதால்,பிற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏல செயல்முறை மொத்தம் … Read more

#IPLMediaRightsAuction:எகிறும் எதிர்பார்ப்பு…இன்று நடைபெறும் IPL ஒளிபரப்பு உரிமை ஏலம்;ரூ.50 ஆயிரம் கோடியா?..!

இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) இன்று (ஜூன் 12 ஆம் தேதி) காலை 11:00 மணிக்கு தொடங்கவுள்ளது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் உள்ளிட்டவை பங்கேற்கவுள்ளன.அதிகபட்சமாக 50 ஆயிரம் கோடி வரை ஏலத்தொகை கேட்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏல செயல்முறை மொத்தம் நான்கு தொகுப்புகளாக (A, B, C மற்றும் … Read more

ஐபிஎல் இறுதிப்போட்டி திட்டமிட்ட நாடகமா? – சுப்பிரமணியன் சுவாமி குற்றசாட்டு!

ஐபிஎல் இறுதிப்போட்டியின் முடிவு மோசடியாக மாற்றப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றசாட்டு. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இறுதிப்போட்டியில் மோசடி நடைபெற்று இருப்பதாக சர்ச்சைகள் கிளப்பியுள்ளது. டாடா ஐபிஎல் 15வது சீசனில் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இசை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட … Read more

எங்கள் வெற்றியை வரும் தலைமுறை பேசும்.! கேப்டன் ஹர்திக் பாண்டியா உற்சாகம்.!

நேற்று ஐபிஎல் 15-வது சீசனுக்காண இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடிமைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது.  131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்குடன் … Read more

தந்தையிடம் மிதி வாங்கிய ஷிகர் தவான்.! வீடியோ ரிலீசாகி செம வைரல்.!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணி 14 லீக் ஆட்டங்களில் 7 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்திருந்தது. இன்னும் ஒரு போட்டியில் நன்றாக விளையாடி நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், வாய்ப்பை தவற விட்டு சோகத்துடன் வெளியேறியது. இதனையடுத்து வீட்டிற்கு சென்ற, ஷிகர் தவான் “நாக் அவுட்களுக்கு தகுதி பெறாததற்காக என் அப்பாவால் நாக் அவுட்” என்று தலைப்பு வைத்து வீடியோ … Read more

#IPL2022: பிளே ஆப்ஸ் சுற்று எங்கு, எப்பொழுது நடைபெறுகிறது? முழு விபரம் இதோ!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து, தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் மும்பை, புனேவில் நடந்து முடிந்தது. இதில் 10 அணிகள் விளையாடிய நிலையில், அதில் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என மொத்தமாக 4 அணிகள் தகுதி பெற்றது. இந்த பிளே ஆப்ஸ் சுற்றில் மொத்தமாக 3 போட்டிகள் நடைபெறும். … Read more

#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபோட கடைசி லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 … Read more

#IPL2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 158 ரன்கள் இலக்கு!

இன்றுநடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more

#IPL2022: கடைசி போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இன்று நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் புவனேஸ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த … Read more