சி.எஸ்.கே-வை விட்டு விலகும் ஜடேஜா.?! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.. ஆதாரம் வெளியிட்ட நெட்டிசன்கள்…

ஜடேஜா, தனது இணையதள பக்கத்தில் சென்னை அணி சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கியுள்ளாராம். மேலும், இந்த வருடம் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஜடேஜா சொல்லவில்லை. 

ஐ.பி.எல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அணிகளில் மிக முக்கிய அணியாக கருதப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணியில் ஒருமுறை ஒரு வீரர் இருந்தாலே அவர் கூட எனக்கு பிடித்த அணி என்றால் சி.எஸ்.கே என கூறிவிடுவார்.

அந்த அணியில் மிக முக்கிய வீரர்களான தோனி, பிராவோ, ஜடேஜா, ராய்டு ஆகியோர் நீண்ட வருடங்களாக சென்னை அணியில் இடம் பெற்று நிரந்தர சென்னை வீரர்களாக இருக்கின்றனர்.

தோனி வயது மூப்பு காரணமாக தனது கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் கொடுத்தார். ஆனால் சீசன் பாதியிலேயே அந்த கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனிக்கு கொடுத்து விலகிவிட்டார் ஜடேஜா. மேலும், ஜடேஜா காயம் காரணமாக கடந்த சீசனில் பாதியில் விளையாடாமல் விலகிவிட்டார்.

தற்போது இணையத்தில் தீயாய் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது, ஜடேஜா, தனது இணையதள பக்கத்தில்  2021- 2022 இடைப்பட்ட காலத்தில் சென்னை அணி சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கியுள்ளாராம். மேலும், வருடம் தவறாமல் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் ஜடேஜா, இந்த வருடம் மிஸ்ஸிங். இதனையெல்லாம்  கணக்கில் கொண்டு, இணையவாசிகள் , அடுத்த  வருட ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக ஜடேஜா விளையாட மாட்டார் என கொளுத்தி போட்டு வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment