#IPL2022: கடைசி போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இன்று நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் புவனேஸ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் இன்று அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

விளையாடும் வீரர்கள்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் ஷர்மா, பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர், ஜகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார் (கேப்டன்), ஃபசல்ஹாக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக்.

பஞ்சாப் கிங்ஸ்:

ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டன், மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷாருக் கான், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்பிரீத் பிரார், நாதன் எல்லிஸ், பிரேராக் மன்கட், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

Leave a Comment