#BREAKING: அதிமுகவில் 6 பேர் பதவியிலிருந்து விடுவிப்பு -ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.!

திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேரை பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளிட்டுள்ளனர். திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினால் அதிமுகவில் 6 பேர் பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திண்டுக்கல் மேற்கு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அதிமுக இன்று ஆலோசனை..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், … Read more

“எனது தலைமையிலான அரசுக்கு இருந்த அக்கறையும்,கரிசனமும் இந்த விடியா திமுக அரசுக்கு இல்லை” – ஈபிஎஸ் வேதனை!

புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை நியாயமாக வழங்கக் கோரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வேண்டும் என என்.எல். சி.நிறுவனம் மற்றும் தமிழக அரசுக்கு என்று ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு,ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும்,வீட்டு மனைகளுக்கு,ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு 40,000 ரூபாயும்,நகரப் பகுதிகளில் 75,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும்,மேலும்,மறு குடியமர்வுக்காக … Read more

“அமைச்சர் சொன்ன பகீர் தகவல்;டாஸ்மாக் கடைகளை உடனே மூடுக” – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

சென்னை:சந்தர்ப்பவாத அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள்,ராக்கெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவுவதாக ஊடகப் பேட்டியில் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் எனவும், இச்சூழலில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?,உடனே அதை மூடுக எனவும் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். விடியா திமுக அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல்,தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு,கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை,தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக … Read more

விடியா அரசில் அதிகரித்து வரும் காவல் நிலைய இறப்புகள் – ஈபிஎஸ்

திமுக ஆட்சியில் காவல்நிலைய இறப்புகள் அதிகரித்து வருவதாகவும், மனித உரிமை மீறல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கடந்த 8 மாதகால விடியா திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது கண்டு மக்கள் கொதிப்படைந்துள்ளனர். குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும், பொது வெளியில் காவல் துறையினரிடம் மரியாதை குறைவாக நடப்பது மிகவும் அதிகரித்துள்ளது. பல நிகழ்வுகளில் காவலர்கள் … Read more

“கோட்டையிலே நமது கோடி பறந்திட வேண்டும்”- ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவிப்பு!

பொன்மனச் செம்மல்,புரட்சித் தலைவர்,இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் நடத்தியது போன்ற பொற்கால ஆட்சியை விரைவில் நிலைநாட்டிட சூளுரைக்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த நாள் என்று அதிமுக உடன்பிறப்புகளுக்கு ஓபிஎஸ்,ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர். வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105 வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்,பொன்மனச் செம்மல்,புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் பாரத் … Read more

பிரதமர் மோடிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட்..!

பிரதமர் மோடிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட். இன்று நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் திருநாளில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது அன்பான தமிழர் திருநாள் … Read more

வரும் ஜன.17 ஆம் தேதி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாள் – அதிமுக தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு!

சென்னை:அதிமுக நிறுவன தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு,ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,இனிப்பு வழங்க உள்ளார்கள் என்றும்,அதிமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. அதிமுக கழக நிறுவன தலைவர் ‘பாரத ரத்னா’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 105-ஆவது பிறந்த நாள் வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.இந்த … Read more

அதிமுக மூத்த தலைமை பேச்சாளர் தரங்கை கண்ணன் காலமானார்- இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்..!

அதிமுக மூத்த தலைமை பேச்சாளர்  தரங்கை கண்ணன் வயது முதிர்வின் காரணமாக காலமானார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த தலைமை பேச்சாளர்  தரங்கை கண்ணன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீதும், கழகத்தின் மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும், மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் உதவியாளர் தந்தை காலமானார்- ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல்..!

கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்தின் நேர்முக உதவியாளர்  லெட்சுமிநாராயணன் தந்தை உடல்நலக் குறைவால் காலமானார் இதுகுறித்து ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  N. தளவாய்சுந்தரம் அவர்களின் நேர்முக உதவியாளர் M. லெட்சுமிநாராயணன்  தந்தை K. முத்துகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் லெட்சுமிநாராயணன் … Read more