உலகநாயகனின் கோரிக்கை கேரள முதல்வரால் நிறைவேற்றப்பட்டது!

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு பல தன்னார்வளர்கள் தங்களால் ஆன நிதியுதவி பொருளுதவி என செய்தனர். திரையுலகினரும் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் உலக நாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலவரான கமலஹாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது மன்றங்கள் மூலமாக பொருளுதவிகளை செய்தார். அதே போல தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என கேரள முதல்வருக்கு கடிதம் மூலம் தனது கோரிக்கையை முன்வைத்தார். அதன் … Read more

கேரளாவில் விடில்லாதவர்களுக்கு வீடு; மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வழங்கிய நடிகர் மம்மூட்டி

கேரள மாநிலம் கொச்சி அருகே சிபிஎம் திருப்புணிப்புரா ஏரியாகமிட்டி சார்பில் கட்டிக் கொடுத்துள்ளவீட்டின் சாவியை மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மம்முட்டியிடமிருந்து வீ்டற்றவர்களாகயிருந்த வேணு-குமாரி தம்பதியினர் மகள்அமுதாவுடன் இணைந்து பெற்றுக் கொண்டனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு சொந்தமாக உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் பிளாஸ்டிக் விரிப்பால் மூடப்பட்ட குடிசையில் இந்த குடும்பம் வசித்து வந்துள்ளது. கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்த இந்த தம்பதியினர் வயதுக்கு வந்த இரண்டு பெண்குழந்தைகளுடன் பாதுகாப்பற்ற நிலையிலிருந்து நல்லதொரு வீட்டில் … Read more

கேரளா மாநிலம் கொல்லம் அதிவிரைவு சாலை முதல்வர் அறிவிப்பு…!!

வரும் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளா மாநிலம் கொல்லம் அதிவிரைவு சாலை (bypass) இரண்டாம் கட்ட பணி நிறைவு செய்யப்படும் எனவும் இதுவரையில் சுமார் 72% வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன.13 கி.மீ. நீளமான பைபாஸ் சுமார் ₨.352 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இந்த சாலையை மாநில அரசு மற்றும் மத்திய அரசால் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார் கேரளா இடது முன்னணி முதல்வர் பினராயி விஜயன். இதனை அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் … Read more

வட்டியில்லா வங்கியை துவங்குகிறது கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…!

  அரசு மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் சார்பில் வட்டியில்லா வங்கி தொடங்க மோடி அரசு தடை விதித்துள்ள நிலையில்,கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடங்கப்படும் சேவை.. இஸ்லாமிய அமைப்புகள் இந்தியாவில் வட்டியில்லா வங்கி துவங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துவிட்ட நிலையில்,கேரளாவில் CPI (M )கட்சி ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறது.   அதன் அடிப்படையில் அக்கட்சியின் ஏற்பாட்டில் கண்ணூரில் “ஹலால் ஃபாயிதா” என்ற பெயரில் வட்டியில்லா கூட்டுறவு வங்கி திறக்கப்படுகிறது.இந்த வங்கியை வரும் 24 ஆம் தேதி … Read more

கேரள அரசு மீனவர்களுக்காக கொண்டுவந்துள்ள புதிய காப்பீட்டு திட்டம்…!

  கேரளா, மீனவர்களுக்காக “க்ரூப் ஆக்சிடென்ட் இன்ச்சுரன்ஸ்”என்னும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை கேரள மீன்வளத்துறை மற்றும் கேரள மீனவர்கள் நலவாரியம் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மீன்பிடிக்க சென்று காணாமல்போகும் மீனவர்கள் மற்றும் படுகாயம் அடையும் மீனவர்களுக்குக் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 – 70 வயதுடைய மீனவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். மேலும் இயற்கைப் பேரிடர் மற்றும் விபத்து மூலம் உயிரிழக்கும் மீனவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம்வரை காப்பீடு கிடைக்கும் என்றும் கேரள அரசு … Read more

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியுதவியை விடுவித்தது மத்திய அரசு…!

ஓகி  புயலால் பாதித்த தமிழகத்திற்கு 2ம் கட்டமாக ₹561 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.அதேபோல் கேரள மாநிலத்திற்கும் 2-ம் கட்டமாக ₹513 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.மாநில பேரிடர் நிவாரண நிதியுதவியை விடுவித்தது மத்திய அரசு. source:dinasuvadu.com    

கற்பழித்து கொல்லப்பட்ட மாணவி ஜிஷாவிற்கு நீதி கிடைக்க போராடியதோடு, குடும்பத்துக்கு வீடும் கட்டி கொடுத்தது கேரளா அரசு…!

  எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்த 29 வயதான சட்ட மாணவி ஜீஷா கடந்த ஏப்ரல் 28, 2016 ல் எர்ணாகுளத்தில் பெருமாவூரில் உள்ள ஒரு கால்வாய்க்கு அருகே அவரது வீட்டில் சில நயவஞ்சகர்களால் கற்பழித்து கொல்லப்பட்டார். இது கேரள மக்கள் மத்தியில் பயங்கரமான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் கேரள அரசியலையே ஒரு பயங்கர புயல் போல் சுழற்றி போட்டது. இந்நிலையில் ஜிஷாவுக்கு நீதி கிடைக்க இடைவிடாது போராடிய இடது ஜனநாயக முன்னணி அரசு .ஜிஷாவின் … Read more

ஓகி புயல்: இழப்பீடு ரூ.20 லட்சம் போதாது ரூ.50 லட்சம் கொடுக்கனும் ட்விட்டரில் கோரிக்கை வைத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…!!

ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் போதாது;அந்த நிவாரண தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்  என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசிடம் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

ஓகி புயல்: உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சமும் ,குடும்பத்தில் படித்த ஒருவருக்கு அரசு வேலை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்து ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் மேலும் அவர் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்

ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த 5 தூத்துக்குடி மீனவர்களில் ஒரு மீனவரின் உடல் இறுதிசடங்குக்காக நாளை தூத்துக்குடி வருகிறது….

தூத்துக்குடி:ஒகி புயலில் சிக்கி உயிழந்த தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ஜூடு(வயது 40) என்பவரது உடல் மட்டும் DNA பரிசோதனை மூலம் மட்டும் அடையாளம் காணப்பட்டு,பின்பு பிரேத பரிசோதனை செய்யபட்டுள்ளார்.இறந்த அந்த மீனவரது உடலானது நாளை காலை தூத்துக்குடி வந்தடையும் பின்பு அவருக்கான இறுதிசடங்கு நடைபெறும் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு … Read more