கேரள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு…!

கேரள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு… ஒக்கி புயலின் தாக்கத்தால் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 20 இலட்சமும் காயத்துடன் மீட்கப்பட்ட மீனவர்களுக்கு ரூபாய் 5 இலட்சமும் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என கேரளா இடது முன்னணி அரசு அறிவித்துள்ளது.

ஓகி புயலால் கடலில் தத்தளித்த 24 மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கடுமையான மழை மற்றும் காற்று காரணமாக இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்த தேசிய தொலைதொடர்பு அமைச்சர் ஜெனரல் சஞ்சய் குமார் அவர்களை தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழு (என்.டி.ஆர்.எப்) குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்றப்பட்டு, இன்னும் பல அணிகள் தற்காலிகமாக கைவசம் வைக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சகம் … Read more