இனி பிறப்பு சான்றில் இது கட்டாயம்… மத்திய அரசு போட்ட புதிய ரூல்ஸ்!

birth certificate

Birth Registration: பிறப்பு சான்றில் இனி குழந்தையின் தாய், தந்தை ஆகிய இருவரின் மதத்தை குறிப்பிட வேண்டும் என அறிவிப்பு. குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் போது அந்த குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் மதத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது பிறப்பு சான்றில் இனி குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் மதத்தை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற … Read more

நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி செய்க.. உள்துறைக்கு கடிதம் எழுதிய சபாநாயகர்.!

Union minister Amit shah - Lok sabha speaker Om birla

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்று 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி.மனோரஞ்சன் என்பவர்கள் நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவையில் உள்ளே குதித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது மஞ்சள் வண்ண பூச்சை பரப்பவிட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் உண்டானது. நாடாளுமன்ற அத்துமீறல்.! இனி பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.. சபாநாயகர் அறிவிப்பு.!  அதே போல நாடளுமன்ற வளாகத்தில் வெளியே ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட … Read more

2024க்குள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் NIA கிளை – அமித்ஷா அறிவிப்பு

2024க்குள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு ( NIA ) கிளைகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா ஹரியானாவில் இன்று தொடங்கிய ‘சிந்தன் ஷிவிர்’ கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.2 நாட்கள் நடக்கும் இம்முகாமில் அமித்ஷா தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். ஒன்பது மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்கள் அல்லது அனைத்து மாநிலங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் கலந்து … Read more

தடுப்பூசி சான்றிதழை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்…மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பூசி சான்றிதழை மக்கள் சமூக வளைதளத்தில பகிர வேண்டாம்.பகிர்வு இணைய மோசடிக்கு வழிவகுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை. இந்தியா கொரோனாவின் 2 வது அலையில் சிக்கித் தவித்து வருகின்றது. மேலும் சில மாதங்களாக கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் மக்கள் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்கள் உறவினர்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி அதன் பாதிப்பைக் கனிசமாக குறைத்து வருகின்றனர், அதில் … Read more

மும்பை மினி பாகிஸ்தான்: கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு.!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக மகாராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் கங்கனா ரனாவத். மும்பையை மினி பாகிஸ்தான் என விமர்சித்தது சர்ச்சை ஆன நிலையில், அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனிடையே, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய நடிகை கங்கனா ரனாவத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து சிவசேனா … Read more

#BREAKING : உள்துறை அமைச்சகம் 9 நபர்களை தீவிரவாதிகளாக அறிவித்தது.!

காலிஸ்தான் ஆதரவாளர்கள் 9 பேரை தீவிரவாதிகளாக  மத்திய உள்துறை அமைச்சகம்அறிவித்துள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் தீவிரவாதிகளாக அறிவிக்கப்ட்டுள்ளனர். இந்த 9 நபர்களும் எல்லையைத் தாண்டி மற்றும் வெளிநாட்டுகளி லிருந்து பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து கிளினிக் மற்றும் நர்சிங்க் ஹோம்களை திறக்க மத்திய உள்துறை உத்தரவு….

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதும் பரவிய பெருந்தொற்றாக மறியது. இந்த தொற்று இந்தியாவையும் விட்டுவைக்க வில்லை. எனவே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இருக்கும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகள்  இயக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அவர்கள்  அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தனியார் கிளினிக்குகள், நர்சிங் ஹோம் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆய்வகங்கள் … Read more

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை.! – உள்துறை அமைச்சகம் அதிரடி.!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கை மாநில அரசு தீவிரமாக அமல்படுத்த உள்ளது.   இந்நிலையில், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு  கடிதம் அனுப்பியுள்ளது. 

ஒரு மாத வாடகை வசூலிக்க கூடாது! வீட்டை காலி செய்ய வற்புறுத்தவும் கூடாது! – மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய உள்துறை அமைச்சகம், ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்துள்ளவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் தங்கியுள்ள வாடகை வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாத வீட்டு வாடகை வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாடகை வீட்டில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள், … Read more

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்கள் யோசனை தெரிவிக்கலாம்! – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

மத்திய அரசானது குடியுரிமை சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டுவந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.  தற்போது இந்த சட்டம் தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மத்திய அரசு அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, இந்தியாவில் குடியேறிய வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களில் முஸ்லீம்கள் தவிர இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள் என ஏனைய மதத்தை … Read more